29 January 2012

அனைவரும் நலமா?

வணக்கம் மக்கள்ஸ். கன காலத்துக்குப் பின்ன இங்க ஒரு இடுகை :)

நேசம் என்ற தலைப்புல புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிறுகதை கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிகளை அறிவிச்சிருக்காங்க.. ஏற்கனவே இது குறித்து வந்த அறிவிப்புகளைப் பார்த்திருப்பீங்க.. நடுவில வந்த பொங்கல் விடுமுறை காரணமா இறுதி நாளை பிப்ரவரி 10 வரைக்கும் நீட்டித்து இருக்காங்க..

உங்களுக்கே தெரியும், மாறி வரும் சுற்றுப்புறச் சூழல்களாலும் தனிமனிதப் பழக்க வழக்கங்களாலும் மரபணுக் குறைபாடுகளாலும் புற்றுநோய்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன என்று.. நோய், உங்களுக்குத் தெரிந்தவர்களை முற்றிய நிலையில் தாக்கியிருப்பதை அறிந்த போது உங்களுக்குத் தோன்றியிருக்கலாம், அல்லது அவர்கள் வருந்தியிருக்கலாம், முன்னமே தெரிய வந்திருந்தா ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்து  இருக்கலாமேன்னு.. இதற்கென இருக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்வது  அதை மற்றவர்களுக்கு அறியத் தருவது - இது தான் இப்போட்டியினுடைய நோக்கம்..

விஷச் செடியை அடையாளங் கண்டு முளையிலேயே கிள்ளி எறிவோம் - புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் குறித்த தகவல்களை, பொதுமக்களுக்கு, அதிலும் குறிப்பா இதைப் பற்றி அவ்வளவாக அறிந்திராதவர்களுக்கு - பரவலாகக் கொண்டு போய்ச் சேர்க்கணும் என்ற அடிப்படையில.. உங்க படைப்புகளை உருவாக்கி அனுப்புங்க..

இப்படியான ஒரு படைப்பை எழுத இது குறித்த தகவல்களைச் சேகரிப்பீங்க என்பதால் உங்களுக்கும் இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பு.. ப்ளாக்கில் உங்க படைப்பைப் போடும் போது, பின்தொடருபவர்கள் படிச்சுத் தெரிஞ்சுப்பாங்க.. திரட்டில இணைக்கும் போது இன்னும் ரீச் ஆகும்.. மேலும் உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச் சொல்லுவீங்க..

பரிசுகளும் உண்டு.. மேலும் தகவல்களுக்கு இங்க எட்டிப் பாருங்க.. இந்தச் சுட்டியை உங்க ப்ளாக்லயும் வெளியிட்டு உதவுங்க.. 

http://nesampeople.blogspot.com/2012/01/blog-post.html 


ஆச்சு.. இன்னும் பன்னெண்டு நாள் தான் இருக்கு.. சீக்கிரமா ஆரம்பிங்க.. ஆரம்பிச்சவங்க நிறைவா முடிச்சு அனுப்பி வைங்க.. இந்த நல்ல நோக்கத்தில் உங்களுடைய பங்களிப்பையும் செலுத்தி இணைந்து கொள்ளுங்க..


நன்றி..