குமரன் கல்லூரி செல்ல ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஓடியிருந்தன.. இந்த இடைவேளையில், பெரிசுகளில் கொஞ்சம் பேர் தடியூன்ற ஆரம்பித்திருந்தனர்.. ஒன்றிரெண்டு பேர் வருவதில்லை.. புதியதாகச் சிலர் பெருசாகப் பதவியுயர்வு பெற்று வர ஆரம்பித்திருந்தனர்.. ஆக, கூட்டத்துக்கு குறைச்சலில்லை.. லொள்ளுக்குந் தான்..
அந்தப் பக்கத் திண்ணையில் பாட்டி தனிக் கூட்டம் கூட்ட ஆரம்பித்திருந்தார்.. தாத்தன் திண்ணையில் கூடுமளவுக்கு இல்லை தான்.. ஆனாலும் அவ்வப்போது என ஒன்றிரண்டு பாட்டியர் நின்று போக ஆரம்பித்திருந்தனர்.. வெள்ளிக்கிழமை தான் இவர்கள் ஊர் சந்தையென்பதால், இவர்கள் வீட்டுத் திண்ணையில் சற்று நேரம் கூடையை இறக்கிவைத்து, தண்ணீர் குடித்து இளைப்பாறி, கதையடித்து விட்டுச் சென்றனர்.. பாட்டியர் திண்ணையில் தாத்தனது திண்ணையைப் போல மல்டினேஷனல், நேஷனல் விஷயங்கள் அலசப்படுவதில்லை.. பெரும்பாலும், மருமகள்களைப் பற்றியும், பேரன் பேத்திகளைப் பற்றியும், அக்கம்பக்கத்தினர் பற்றியுந் தான் பேசப்பட்டது..
செமஸ்டர் லீவில் ஊர் திரும்பியிருந்தான் குமரன்.. அவனுக்கென்னமோ, தாத்தன் திண்ணை தான் சுவாரசியமாகப் பட்டது.. எனினும், பெரிசுகளின் லொள்ளுக்கு பயந்து பாட்டியின் திண்ணைப் பக்கம் ஒதுங்க ஆரம்பித்திருந்தான்.. அன்று மாலை, தனது வீட்டிலிருந்து வெளியே வந்தவன் (பாட்டிக்கும் இவனது அம்மாவிற்கும் ஒத்து வராததால், அருகருகிலேயே தனித்தனி வீடுகளில் வசித்து வந்தனர்) திண்ணைப் பக்கமாகத் திரும்பிப் பார்க்க, அங்கு தன் பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தவரைக் கண்டதும், சற்று யோசித்து விட்டு, முன் வைத்த காலை வீட்டுக்குள் பின்னெடுத்து வைத்தான்.. இவர் அந்தப் பொ............ய்ப் பாட்டியன்றோ..
சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவமிது.. ஒரு நாள் இவன் தன்பாட்டுக்கு தாத்தனின் திண்ணையில் அமர்ந்து கரும்பு கடித்துக் கொண்டிருக்க, இந்தப் பொ........ய்ப் பாட்டி இவர்களது வீட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.. மரியாதை நிமித்தமாக, இவன் அவரைப் பார்த்துச் சிரித்து வைத்தான்.. அவரும் பதிலுக்கு புன்னகை பூத்து, நலம் விசாரிக்க வாய் திறக்க, அதற்குள் இவன் முந்திவிட்டான்..
”கரும்பு சாப்புட்டுப் போங்க பாட்டி”
அவ்வளவு தான், அவருக்கு வந்ததே கோபம்.. இவனை முறைத்துப் பார்த்து விட்டு, விடுவிடுவென நடந்து சென்றவர், நேரே இவனது வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார்.. இவனது அம்மா வந்து திறந்துவிட, உள்ளே சென்றவர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து, மறுபடியும் இவனை முறைத்தவாறே கடந்து சென்றார்.. இவனுக்கு ஒன்னும் புரியவில்லை.. அவர் சென்ற பின், இவனது அம்மா இவனை அழைத்தார்..
“ஏண்டா, உனக்கு வம்பிழுக்க வேறாளே கிடைக்கலியா?”
“என்னது??”
“அவுங்க பேரே பொக்க வாய்ப் பாட்டி.. அவங்களப் போயி கரும்பு திங்கறீங்களான்னு கேட்டியாம்ல்ல??”
அதே பொ.....ய்ப் பாட்டி தான்.. கன்ஃபர்ம் செய்திட்டு குமரன் வீட்டுக்குள் ஓடும் முன், பொ.....ய்ப் பாட்டி இவனையழைத்தார்...
”கொமாரு.... என்னைய அடையாளம் தெரியுதா?”
(இதுக்கு அந்த டொமாரே பரவாயில்லையோ??)
“தெரியுதுங்க பாட்டி..”
“கம்ப்யூட்டருக்கு படிக்கறயாம்ல்ல?”
“ஆமாங்க”
“இந்த மூணு மாசம் ஆறு மாசம்ன்னு கம்ப்யூட்டருக்கு படிக்கறாங்களாம்ல.. அந்த மாதிரிப் படிக்கிறியா? அதயப் படிச்சா மட்டும் வேலை கிடைக்காதாம்ல்ல?”
வெகு நாட்கள் கழித்து, மறுபடியும் க........ன் குமரன்...
பெரிசுகள் தானென்று இல்லை.. இந்தச் சிறிசுகளுக்கும் இவனைக் கண்டால் தொக்காய்த்தானிருந்தது..
சரண்.. இவனது பெரியம்மா பெண்ணின் மகன்.. படிப்பது ஏழாவது.. ஆனால் அப்போதே அவனது பேச்சில், பல வருடங்கள் கழித்து பெருசாகப் போவதன் சாயல் இருந்தது...
”மாமா.. நீங்க தான் கம்ப்யூட்டர் இஞ்சினியருக்குப் படிக்கறீங்கள்ல?”
“ஆமா, அதுக்கென்ன இப்போ?”
“எங்க, கம்ப்யூட்டர் கீ போர்ட் ல எத்தன கீ இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்..”
இவன் விடை தெரியாமல் முழிக்க,
“இது கூடத் தெரியலீங்களே மாமா உங்களுக்கு”
சரண் விடையைச் சொன்னதும், இவனது அக்கா இவனைப் பார்த்த பார்வையில், எம்மவன் உன்னையவிட அறிவாளிடா என்ற பெருமை தெறித்தது...
மறுபடியும் க.......ன் குமரன்...
பொறுத்தார் பூமியாள்வார்.. இதோ.. இன்று குமரன் தனது கம்ப்யூட்டர் இஞ்சினியர் என்ற இமேஜுக்கு ஏற்பட்ட அத்தனை டேமேஜ்களையும் கடந்து, தனது படிப்பை முடித்து, வேலையுங் கிடைத்து, அமெரிக்காவில் பணி புரிகிறான்.. இன்று அவன் வெற்றித் திருமகன்..
ஆனாலும், விதி விடுவதாயில்லை... க்ளையண்ட் கம்பனி மக்களுக்கு எப்போதெல்லாம் இவர்களது சாஃப்ட்வேரில் பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் இவன் உடனடி தரிசனம் தந்து, முன்னின்று, அதனைச் சரி பார்த்துத் தர வேண்டும்..
ஒரு நாள் இந்தூர்ப் பெரிசு ஒருவர் அவனை அழைத்தார்..
“I am not able to log in.. My username and password are same as before..”
“Just reboot your computer and try again” பதிலளித்தான் குமரன்..
“I know to do that... I thought you software guys had better solutions for such problems..”
டொம்மென்று ஃபோனைச் சாத்தினார் பெரிசு...
க.........ன் குமரன்..
ஆச்சு.. நாளும் போச்சு... இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் கிழித்தது போக, இன்று விடுமுறையில் குமரன் ஊர் திரும்பியிருந்தான்.. எத்தனை முறை மிதிபட்டிருந்தாலும், என்றும் போல இன்றும் அவனுள் பெருமை.. இம்முறை, சாந்தியும் அவளது பெற்றோரும் அவனைக் காண அவனது வீட்டுக்கு வந்திருந்தனர்.. சாந்தி அவனுக்கு தூரத்துச் சொந்தம்.. உறவு முறையில், அத்தை மகள்.. பி எஸ் சி கணிதம் முடித்திருக்கிறாள்.. அவளைப் பார்த்ததும், சிறு வயதுப் பொழுதுகளின் ஞாபகம் வந்தது.. அவனது வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்த அவளை கிள்ளி வைத்து அழவைத்திருக்கிறான்.. அம்மாவிடமும் அத்தையிடமும் சொல்லக் கூடாதென்று மிரட்டியிருக்கிறான்.. இன்று சாந்தி வளர்ந்திருந்தாள்.. அழகாயிருந்தாள்..
“மாமோவ்.. இங்க வாங்களேன்”..
எங்கே இன்று அவள் பதிலுக்கு தனது நீள் நகங்களைக் கொண்டு ஆழமாகக் கிள்ளி காயப்படுத்தி வைப்பாளோ என்ற எண்ணம் அவனுக்குள் படபடப்பை ஏற்படுத்த.... மறுக்காவும் தப்பு பண்றீங்க எல்ஸ்.. எனது படபடப்புக்குக் காரணம் அதுவல்ல.. :)))
சாந்தி, தனது லேப்டாப்பையும் எடுத்து வந்திருந்தாள் அவனுக்குக் காட்ட...
“என்னடி?”
“மரியாதையாக் கூப்பிடுங்க மாமோவ்.. நம்ம ரெண்டு பேரு ஜாதகமும் பொருந்திப் போச்சாம்.. எப்ப வேணும்னாலும் எதுவும் நடக்கலாம்.. அதனால இப்பயிருந்தே மரியாத பழவிக்கோங்க”
ஊர்ல ரெண்டு வருஷம் இல்லீன்னா, பழக்க வழக்கம் எல்லாமே மாறிப் போன மாதிரி இருக்கே.. ஹும்.. படபடப்பைக் காட்டிக் கொள்ளாமல் பெருமூச்சு விட்டான் குமரன்...
”மாமா.. போன வாரம் படம் பாத்துக்கிட்டிருந்தப்போ, திடீர்ன்னு லேப்டாப்ல என்னமோ கோளாறாயிப் போயிருச்சு.. வைரஸ் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்.. கேஸ்பர்ஸ்கை போட்டிருந்தும் ஒன்னும் முடியல...”
என்னால மட்டும் முடியப் போவுதாக்குமென்று, மனதுக்குள் முணகியவாறே அவன் லேப்டாப்பை ஆன் செய்ய முயற்சித்தான்.. எவ்வளவு முயன்றும், பூட் ஆக மறுத்தது...
“பெரிய கம்ப்யூட்டர் எஞ்சினியரு, அமெரிக்காவுல வேல பாக்குறீங்கன்னு தான் பேரு.. ஒரு வைரஸக் கூட சரி பண்ண முடியலயே உங்களால...”
இம்முறை, குமரன் கடுப்பாகவில்லை.... புன்னகைத்தவாறே, அவளது காதைக் கிள்ள கையை ஓங்கினான்.. :)))
(இமாவின் ”க......ன் இமா” வைப் பார்த்து பயந்துபோய் ஒரே இரவில் எழுதி முடிச்சிட்டேன் :) )
உங்களில் யாருக்கும் “இஞ்சி” “நீர்” அனுபவங்கள் இருந்தால் தொடருங்கள் மக்கள்ஸ்...