பள்ளியில் தீ
திருமண மண்டபத்தில் தீ
ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ (சமீபத்தில் பெங்களூரில்)
இங்கெல்லாம் வடை சுட வடச்சட்டியில் காயவைத்த எண்ணை கொஞ்சம் அதிகமாகச் சூடேறிப்போனாலே கீ கீ என்று அலாரமலறி ஊரையே கூப்பிட்டு விடுகிறது..
அலுவலகத்தில், நூலகத்தில் இது போன்ற சத்தமான கீ கீ அலர்ட்களைக் கேட்டு எல்லோரும் விரைவாய் வெளியேறிட, இதைச் சமாளிப்பதில் அனுபவமிக்கவர்கள் உள் நுழைந்து என்ன விஷயம் எனத் தேடி, எதுவுமில்லையென உறுதி செய்துகொண்ட பின்பு, மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படுவோம்.
நம் ஊரில் பள்ளி போன்ற இடங்களில் தீ யணைக்கும் கருவி ஒன்றை அங்கொன்றும் இங்கொன்றும் வைத்திருப்பார்கள்.. மிக எளிய பயன்பாடு.. அதன் மூக்கை தரையில் இடித்தால் உள்ளே ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு செயலாற்ற ஆரம்பித்துவிடும் (எல்லா பொதுக் கட்டிடங்களுள்ளும் வைக்கபட்டிருக்கிறதா என்று தெரியவில்லை). ஆனால் தீயைக் கட்டுப்படுத்த இது போதுமா? எனக்குத் தெரிந்து நம்மூரில் ஃபயர் அலார்மை எங்கும் கண்டதில்லை.. கண்ணிமைக்கும் நேரத்தில் மிக வேகமாக சுற்றியெங்கும் பரவிடும் தீயை வருமுன் கட்டுப்படுத்துதல் தானே சரிப்பட்டு வரும்?
இலவச தொலைக்காட்சி வழங்குதல் போன்ற “அறிவார்த்தமான” நல்லவைகளை செய்து வரும் அரசாங்கம், இத்தனை சம்பவங்கள், இத்தனை உயிரிழப்புகள், இத்தனை வேதனைகளை எதிர்கொண்ட பின்பாவது, குறைந்தபட்சம் இது போன்ற பலர் கூடும்/ வசிக்கும் கட்டிடங்களிலாவது ஃபயர் அலார்ம் சிஸ்டத்தைக் கட்டாயமாக்குமா? அரசாங்கப் பள்ளிகளுக்கு, அலுவலகங்களுக்கு இந்தச் சேவையைச் செய்து தருமா?
THERE IS A DEVICE WHICH SENDS RAYS FROM ONE TERMINAL TO OTHER TERMINAL(LIKE CAPACITOR). LIKE
-------/ /-------
BETWEEN THESE, A RAY WIL TRAVEL. IF FIRE OCCURS, SMOKE WILL FORM, THAT ACTS AS A BARRIER FOR THE LIGHT, SO LIGHT WILL NOT ENTER THE OTHER TERMINAL. THE SENSOR SENSES THAT AND BLOWS ALARM.
தகவலுக்கு நன்றி - allinterview.com
வைத்து விட்டு அப்படியே மறந்து விடக் கூடாது.. அவ்வப்போது மாதமொருமுறை போன்று தரக்கட்டுப்பாட்டுச் சோதனையும் மேற்க்கொண்டு, இதன் செயல்பாட்டைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வர வேண்டும். நடக்குமா???