09 April 2010

எங்கவூரில் ஒரு மழைக்காலம்...



விடுமுறைப் பொழுது.....
மாலை நேரத்து மழை.....
தெளித்தெழுப்பும் மண் வாசனை.....
பால்கனியில் தெறிக்கும் சாரல்....
வருடிக் கொண்டிருக்கும் தென்றல்....
இளஞ்சூடான தேனீர்....
மூடிக்கிடக்கும் கண்கள்.....
விழித்திருக்கும் உணர்வுகள்.....
என்னருகே நீ.....
கொஞ்சம் நேரமேயாயினும்
உலகம் மறந்திருக்கக்
கிடைத்த இவ்வேளை..............

இது, சென்ற புதன் கிழமையன்று கிடைத்த  மாலை மழைப் பொழுதில் எழுதப்பட்டது.. அப்படியே புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்த போது, ஏற்கனவே இந்த மாதிரி எடுத்ததொன்று நினைவுக்கு வந்தது.. இந்தப் புகைப்படம் இந்தியாவில் கல்லூரி விடுதியின் பால்கனியில் இருந்து எடுத்தது.. உண்மையில், இதே இடத்திலிருந்து இதைப் போன்றதொரு பொழுதில் முதலில் எடுக்கப்பட்ட படம், சேமிக்கத் தவறி கேமராவில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது.. வருத்தமோ வருத்தம்.. அடுத்த சில நாட்களில், மீண்டும் அதே நேரத்தில் மழை.. அதே உணர்வுகள்.. அம்முறை, எடுத்தவுடனே சேமித்து வைத்தாயிற்று.. என்னருகே நீ இதில் மிஸ்ஸிங் :))

(போதும் நிறுத்து எல்போர்ட்.. எத்தனையோ முறை மழைய கண்டபடிக்கு திட்டிப்போட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போயிருக்க.. இந்த ஹீரோயின் பீலிங்ஸ் எல்லாம் விடக் கூடாது...)

அதற்காக, மழையில், வானம் பார்த்து, கைகளை விரித்து, வாய் திறந்து, சுற்றியவாறே, பாடிக் கொண்டிருப்பேன் என்று மட்டும் யாரும் கற்பனை பண்ணிப் போடாதீர்கள் :)) மழையைக் காணும் போதெல்லாம் அப்படி ஆடி மகிழ்வததென்பது, மிக்க உணர்வுப்பூர்வமான நம் தமிழ்ச் சினிமா நாயகிகளால் மட்டுமே முடியும் :)))