30 September 2010

இ'ரை'யாண்மை (சவால் சிறுகதை)


"காமினி.. ஆர் யூ ஆல்ரைட்?" அருகில் வந்து, படுக்கையில் அமர்ந்து, மென்மையாக அவளது விரல்களைக் கையிலெடுத்தார் டாக்டர் பரந்தாமன்.

சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்றில், ரியல் எஸ்டேட் பெரும்புள்ளிகளால் வளைத்துப் போடப்பட்டு, ‘காலனி’யாதிக்கம் பெற்று, ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள் கட்டப்பட்டு, புதியதாக ஆனால் பாதியே பருவம் எய்தியிருந்தது அந்த இடம்.  அந்தப் பரப்பளவின் ஒரு சிறிய அங்கமாக, அருகிலிருக்கும் பெரு நகரத்தின் ஆரவாரத்தைப் பூச விருப்பமில்லாமல் இருந்தது அந்தச் சாலை.  அதிகம் ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதியில் பயணிக்கும் எவரின் கண்ணும் சாலையோரத்தில் அமைந்திருந்த அந்த வீட்டின் மீது படாமல் கடந்து போனதில்லை. இதை உணர்ந்தே அதன் அழகையும் தனித்தன்மையையும் உரிமையற்ற பார்வைகளிடம் இருந்து காக்கும் பொருட்டு சுற்றிலும் பசுமையைப் போர்த்திவிட்டிருந்தார் உருவாக்கியவர். அந்த வீட்டின் கீழ்நிலையில் அமைந்திருந்த பெரியதொரு படுக்கையறையினுள், சுழலும் நாற்காலி ஒன்றின் மீது சாய்ந்தமர்ந்தவாறு, கண்களை மூடிய நிலையில், நடப்பதை உள்வாங்கிக்கொண்டிருந்தான் சிவா. காமினி பேசட்டும் எனக் காத்திருந்தான்.. 

கண் விழித்த காமினி, விரல்களை விடுவித்து, கைகளை ஊன்றி கொஞ்சமாக எழுந்து, தலையணையை பின்னே நிறுத்தி வைத்து, அதன் மீது சாய்ந்தாள்.. மாஸ்க்கை கொஞ்சமாக கீழே இழுத்து விட்டுக் கொண்டாள். எதிரில் இருந்த டீவியின் செய்தி  கேட்டதும், "அந்த டீவிய முதல்ல நிறுத்தித் தொலைங்க.." எரிந்து விழுந்தாள்.

'ரேஷன் கடை அரிசி மூட்டைகளுக்கு சாக்குப் பை...... ' ரிமோட்டைக் கையிலெடுத்து அறையை அமைதியாக்கினான் சிவா. 

"வேற ஆளே கிடைக்கலையா உங்களுக்கு?" காமினியின் குரலில் அதிகமாகியிருந்தது எரிச்சல்.

"நம்பிக்கையான ஆளா இருக்கணும் காமினி.. அதுவுமில்லாம, தேடினா சிக்கிக்கிற மாதிரி இருக்கக்கூடாது..  உன்ன இங்க யாருக்கும் அவ்வளவாத் தெரியாது.. அதான்" காமினியின் கண்களை கூர்ந்து நோக்கியவாறு, நிதானமாகப் பேசினார் பரந்தாமன்.

"நேத்திக்கு வரைக்கும் சரின்னு தான சொன்ன? என்ன தான் பிரச்சனை இப்ப உனக்கு? எவ்வளவு ரிஸ்க்கான வேலை, விளைவுகள் எப்படியிருக்கும்ன்னு சொல்றப்பக் கூட மறுத்துப் பேசலையே நீ?" அதுவரை அமைதியாய் இருந்த சிவா பொறுமையிழந்து குரலை உயர்த்தினான்.

“மூச்சு திணறுது எனக்கு” சிவாவின் ஆளுமைக்கு முன் கொஞ்சம் அடங்கி ஒலித்தது காமினியின் குரல்.

“சிவா.. ம்ம்ம்..” அதே அமைதியான, ஆனால் உறுதியான குரலில் அவனைப் பின்னுக்குப் போகச் செய்தார் பரந்தாமன். “காமினி.. ஐ அண்டர்ஸ்டேண்ட்.. இது தான முதல் தடவை? போகப் போகச் சரியாகிடும். என்ன நம்பு.. யூ நீட் நாட் வொர்ரி அபவுட் திஸ்.. அதுவுமில்லாம, நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்தாத் தான் இதெல்லாம் தேவைப்படும்.. ப்ளான் சரியா நடக்க சான்ஸ் அம்பது பெர்சென்ட் தான்.. புரியுதா?"

எதுவும் பேச விருப்பமற்று தலையைத் திருப்பிக் கொண்டாள் காமினி.
“சிவா.. எனக்கு நேரமாச்சு.. இன்னும் மூணு நாள் தான் இருக்கு.. மீதி ஆட்களையும் தயார் பண்ணனும்.. லுக் காமினி.. சிவாக்கு இன்னைக்கு லீவ்.. இங்கதான் இருக்கப் போறான்.. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு.. அப்புறம் ப்ராக்டீஸ் பண்ணு.. நாளைக்குப் பார்க்கலாம்..” பேசிக்கொண்டே எழுந்தார் பரந்தாமன்.

“நீங்க போங்க சார்.. காமினிய நான் பாத்துக்கறேன்” எழுந்து விடை கொடுத்தான் சிவா..

அறையை விட்டு டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

“ஹே காமினி.. என்னதிது சின்னப்புள்ளத்தனமா? எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம் வா..” சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கவனமாகக் குரலைத் தாழ்த்தியிருந்தான் சிவா.

அவள் எழ முயற்சிப்பதற்குள், சிவாவும் வெளியே குதித்தான். காமினியை அவனது பிடிக்குள் கொண்டு வர அதிக முயற்சி தேவைப்படவில்லை. ஜன்னல் வீட்டின் பின்புறமாக அமைக்கப்பட்டிருந்ததாலும், அந்நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்துகொண்டதாலும், இதன் பாதிப்பு ஏதுமில்லாமல் பரந்தாமன் ஆட்டோமேடிக் கேட்டின் வழியே வெளியேறிக் கொண்டிருந்தார்.

அவளது திமிறல் அதிகமாகவும், ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலைஎன்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. சத்தம் கேட்டு யாரும் வந்து விடப் போகிறார்கள் என்ற கவலை அவனுக்கு.

“இந்த வேலையெல்லாம் எங்கிட்ட ஆகாது இன்ஸ்பெக்டர்..” அவனை முறைத்தவாறே துப்பாக்கியைத் தட்டி விட்டாள் காமினி.

“முதல்ல வீட்டுக்கு வா. உட்காந்து பேசுவோம்..” என்றான் சிவா புன்னகையுடன்.

******

வெள்ளிகிழமை மாலை.. மாநகரின் மையப்பகுதியிலிருந்த அந்த மருத்துவமனையின் அகண்ட வரவேற்புப் பகுதியில், உறவினர்கள் விட்டுச் சென்ற நிறங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, மங்கலான மஞ்சள் வெளிச்சம் மட்டும் மிச்சமிருந்தது. எமர்ஜென்சி பிரிவில், மருத்துவர்களுக்கான அறையில், அவனது அம்மா அனுப்பியிருந்த புகைப்படங்களை சிப்ஸ் கொறித்தவாறே கணினியில் ஜூம் செய்து கொண்டிருந்தான் மகேஷ்.. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு “எஸ்” என்றான்.  பதற்றத்துடன் உள்ளே வந்தாள் நர்ஸ் செல்லா... “டாக்டர்.. ஒரு எமர்ஜென்சி.. “

கணினியின் பக்கமிருந்த தன் முகத்தைத் திருப்பினான் மகேஷ்... “மேல சொல்லு”

“இருபது வயசு இருக்கும் டாக்டர்.. ரொம்ப ப்ரெத்லெஸ்சா இருக்கா.. இன்னைக்கு காலைல தான் ஆரம்பிச்சுதாம்.. அதிகமாகிக்கிட்டே போகுதாம்...” செல்லாவுக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது..

“எங்க இருக்காங்க?” அறையை விட்டு வெளியே வந்திருந்தான் மகேஷ்..

“ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. ஆக்சிஜன் போயிட்டு இருக்கு.. பல்ஸ் அண்ட் பிபி நார்மல்..” பேசிக்கொண்டே மகேஷ் பின்னால் ஓடினாள் செல்லா.

அறைக்குள் நிலைமை ஓரளவுக்குச் சீராக இருப்பதைக் கண்டு, முதற் கட்ட பரிசோதனைகளை ஆரம்பித்தான் மகேஷ். “கூட யார் இருக்காங்க.. வரச் சொல்லு”

“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?”

“அம்மா சார்..” என்றார் அந்தப் பெண்மணி அழுகையினூடே,.. “காலைல நல்லாத் தான் இருந்தா.. திடீர்னு ஆரம்பிச்சுது... ஒண்ணுமே புரியல..” பதற்றம், கலக்கம், குழப்பம், இயலாமை என எல்லாம் சேர்ந்து அவரது கண்களில் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தன..

“அழாதீங்கம்மா.. முதல்ல கண்ணத் துடைங்க.. உட்காந்து பேசுவோம்..” செல்லாவின் பக்கம் திரும்பி, “செல்லா.. நீ பக்கத்துலயே இரு.. அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதரம் வைட்டல்ஸ் செக் பண்ணு.. நான் இவங்க கூட பேசிட்டு வர்றேன்..”

வெளியே, கேள்விகள்.. விசும்பல்கள்... பதில்கள்... செல்லா கவலையுடன் தனது பேஷன்ட்டைப் பார்த்தவாறு அமர்ந்தாள்.. ரொம்பச் சின்னப்புள்ளையா இருக்கே.. அவளது மனம் சலனமுற்றிருந்தது..

சில நிமிடங்கள் கரைந்த பின் உள்ளே வந்தான் மகேஷ். “செல்லா.. முதல்ல செஸ்ட் எக்ஸ்ரே.. ஈசிஜி.. அப்புறம் இந்த பிளட் டெஸ்ட்ஸ் எல்லாம் அனுப்பிடு.. ஷீ இஸ் ஸ்டேபிள் நவ்.. ஆனா, மறுபடியும் எப்பவேனும்னாலும் மோசமாகலாம்.. நான் ஐஸியூக்கு கால் பண்ணி அங்க நிலைமை என்னன்னு கேக்கறேன்..”

திரும்பி வந்தான்.. “ஐசியூ ஒன்ல இடமில்லையாம்.. டூ க்கு ஷிப்ட் பண்ணனும்.. வார்ட்பாய்க்கு கால் பண்ணு..”

அடுத்தடுத்து அவன் கொடுத்த வேலைகளால் திணறிப் போனாள் செல்லா. டெஸ்ட் ஆர்டர்கள் அனுப்பிமுடித்து, வார்ட்பாய்க்கு போன் செய்யப் போகும் போது தான் அவன் கடைசியாகச் சொன்னது உறைத்தது.. “டூ க்கு எப்படி டாக்டர்? விஸ்வநாதன் சொல்லியிருக்காரே..”

“சொல்லியிருக்கார் தான்.. ஒன்ல இடமில்லைன்னு தான அங்க போறோம்? தப்பில்ல.. விஸ்வநாதன் ரெண்டு நாளைக்கு லீவு.. நாந்தான் இன்சார்ஜ்.. நான் முதல்ல டூ க்குப் போய் நேர்ல பார்த்து பேசிட்டு வரேன்.. கவனமா ஷிப்ட் பண்ணுவோம்.. இவளுக்கும் இன்னும் முழுசா நினைவு திரும்பல.. யாருக்கும் தொந்தரவு இருக்காது.. அப்புறம்.. இப்போதைக்கு ஆக்சிஜன்லயே இருக்கட்டும்.. தேவைப்பட்டா மத்த மெடிசின்ஸ் கொடுத்துக்கலாம்.. முழுசும் படுக்க வைக்க வேண்டாம்.. ரெண்டு தலையணை வைத்து லேசா சாய்ந்த மாதிரி இருக்கட்டும்.. க்விக்.. லெட் அஸ் நாட் வேஸ்ட் ஹெர் மினிட்ஸ்..”

**********

பரபரப்பெல்லாம் ஓய்ந்து போய் குறட்டைச் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், துளி வெளிச்சம் புகும் அளவுக்கு மட்டும் கண்ணைத் திறந்தாள் காமினி. எதிர் பெட்டில் இருப்பவர் குறட்டை விட்டவாறு தூங்கிக்கொண்டிருக்க, மறுபக்கம் நர்ஸ் டேபிள் மேல் தலையை வைத்து கண் அசந்திருந்தார். சுற்றிலும் மானிட்டர்கள் இயங்கிக் கொண்டிருந்தன.. கண்களை மூடிக் கொண்டாள்..

அதிகம் சத்தமெழுப்பாமல், இரவில் இருமுறை மகேஷ் ரவுண்ட்ஸ் வந்து போனான். அவளது சீரான மூச்சைக் கண்டு நிம்மதியடைந்தான். அவனது தொடுதலை உணர்ந்து, விழித்து, புன்னகைத்தாள் காமினி. அவனுக்கும் மனசு கேட்கவில்லை.. பாவம், சின்னப் பெண்.. விஸ்வநாதன் புரிந்து கொள்வார் என்று நம்பினான். ரிசல்ட்கள் அனைத்தும் நார்மலாக இருந்தன. அந்தத் தாயிடம் சொல்லி, அவளது பெருமூச்சில் பங்கெடுத்து, மனநிறைவு அடைய விரும்பினான்.

அடுத்த நாள் காலை விடிவதற்குள் தனிரூமுக்கு மாற்றப்பட்டு, மதியமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள் காமினி. தாயானவள், இம்முறை ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

**********

காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியேஎன்று பாராட்டினார் பரந்தாமன்.

“ம்ம்ம்.. இனிமே உங்க விஷப் பரீட்சையையெல்லாம் என்ன வச்சு எழுத வைக்காதீங்க.. இதோ நிக்கிறாரே சிவா.. இவர் போகட்டும்” கடுப்புடன் தன் காதிலிருந்த பெரிய வைரத் தோடுகளை கழற்றித் தந்தாள் காமினி.

“சிவா.. காமினி முதல்ல அமெரிக்கா கிளம்பட்டும்.. மீதி வேலைகளெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. உன் உதவிக்கு ரொம்ப தேங்ஸ் சிவா.. உன்னோட ப்ளூ பிரிண்ட் இல்லாம எதுவும் நடந்திருக்காது..”

“உங்களுக்குத் தான் சார் நன்றி சொல்லணும்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்..”

*******

நான்கு நாட்கள் கழித்து....

விடுமுறை நாட்களை இந்தியாவில் கழித்துவிட்டு ஊர் திரும்பியிருந்த காமினி, டல்லசில் தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். நடந்ததெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும், முன்பிருந்ததை விட வேகம் குறைந்திருந்தது. அப்பாவை நினைத்து ஒருபுறம் பெருமையாகவும் மறுபுறம் கவலையாகவும் இருந்தது. அவருக்கு எதுவும் ஆபத்து வந்து விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டாள். நினைவுகளில் சிவா வந்து போனான்.. கூட அவனது ஆளுமையும் நேர்மையும் வந்து போயின.. மகேஷ் வந்து போனான்.. கூட அவனது மென்மையும் கடமையுணர்வும்.. அப்பாவுக்காகவும் நாட்டுக்காகவும் துணிய வைத்த தனது பாசத்தையும் பற்றையும் நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது.

சிவா அன்று சந்தோஷமாக இருந்தான். கரையானரித்துப் போய் பெருச்சாளிகள் பலவற்றை தப்ப விட்டிருந்த அவனது டிபார்மெண்டின் ஓட்டைகளை, அதிகாரப்பூர்வமற்ற ‘டெல்டா.காம்’ இன் உதவியுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டான்.

மகேஷும் செல்லாவும் விஸ்வநாதனின் முன்பு நின்று கொண்டிருந்தார்கள்.. தங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லையென்றும், உயிர் காக்கவே அப்படிச் செய்ததாகவும் வாதாடிக் கொண்டிருந்தார்கள்.. மகேஷ் கலங்கியிருந்தான்.. செல்லா அழுது கொண்டிருந்தாள்..

பன்-டி-டிவியில், அன்று மட்டுமே நூற்றி எட்டாவது முறையாக, கவனமாக எடிட் செய்யப்பட்டிருந்த அந்த வீடியோ, ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்தது.. 'ரேஷன் கடை அரிசி மூட்டைகளுக்கு சாக்குப் பை வழங்கியதில் ஊழல் புரிந்தததற்காக கைது செய்யப்பட்டு, மாரடைக்கிறது என்று கோர்ட்டில் மயங்கி விழுந்து, கப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த ஆளுங்கட்சி அமைச்சர் மெய்யப்பன், ஐசியூவில் உட்கார்ந்து மட்டன் பிரியாணியும், சிக்கன் 65 வும் தின்றுகொண்டிருக்க, நடுநடுவே காவல் துறை உயரதிகாரிகள் வந்து போய்க்கொண்டிருந்தனர்’

மாநில ஆளுங்கட்சிக்கு எதிராகப் படம்பிடிக்கப்பட்ட ஆதாரத்தை, மத்திய ஆளுங்கட்சியிடம் விலைபெற்று வழங்கி, தனது ஆட்சி-அதிகார ஆசைப் பேய்க்கு, பாசம்-நேர்மை-கடமையென, நல்லுணர்வுகளை இரையாக்கியிருந்த டெல்டா.காம் பரந்தாமன், சோபாவில் சாய்ந்தவாறு, பன்-டி-டிவி யில் நாட்டு நடப்பை அவதானித்துக் கொண்டிருந்தார்.. அவரிடத்தில் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த குற்றவுணர்வும், விஸ்கி க்ளாசினுள் ஐஸ்கட்டியாகக் கரைந்து கொண்டிருந்தது...

*****END*****

டிஸ்கி: கதையோட தலைப்புக்கும், இன்னைக்கு வந்திருக்கற தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..


பிகு:

இது சவால் சிறுகதை.. விபரங்களுக்கு இங்க பாருங்க..

இதுக்காக எழுதப்பட்ட ரெண்டு மூணு கதைகளைப் படிச்சதும், எனக்கும் ஆச வந்தது.. எழுதிட்டேன்.. "L" கதைன்றதால போட்டிக்கு அனுப்ப விருப்பமில்ல.. யாராச்சும், "பரவாயில்ல.. அந்தளவுக்கு மோசமில்ல.. சுமாரா இருக்கு.. அனுப்புங்க" ன்னு சொன்னா, அவங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பலாம்ன்னு இருக்கேன்.. 

அடுத்தவன் காரோட்டும் போது, அந்தப் பக்கமா போ.. இப்படித் திருப்புன்னு சொல்றது ஈஸி.. சொந்தமா முதல்ல கார்ல உட்காரும் போது தான் சிரமம் தெரியும்.. இங்கயும் அப்படித் தான்.. எழுதி முடிச்ச பின்னாடி, இதுக்கு முன்னாடி நிறைய கதைகளப் படிச்சு கேள்வி கேட்டு வச்சிருக்கோமே, நம்ம கதைலயும் அப்படி கேட்டுப் பாக்கலாம் ன்னு கேட்டா, ஏகப்பட்ட ஓட்டைஸ்.. என்னால கண்டு பிடிக்க முடிஞ்சதெல்லாம் கோந்து போட்டு ஒட்டிட்டேன்.. நீங்களும் கண்டுபிடிச்சு சொன்னா பரிசு உண்டு (ஆட்டோ இல்ல).. இலக்கணப் பிழை கணக்குல வராது.. இப்பவே சொல்லிட்டேன்..

அப்புறம், இந்தப் பொண்ணு அழகா இருந்ததால இந்தப் படத்த இணைச்சேன்.. கதைல வர்ற மாஸ்க் வேற..

26 September 2010

எ கொ ச இ?



இப்போதான் இந்தக் குறும்படத்தப் பாத்தேன்.. Just for fun.. யாரும் அடிக்க வராதீங்க மக்கள்ஸ் :)

போன இடுகைக்கான தொடர்ச்சி இது.. புரிஞ்சுதா? பயப்படாம பாத்து, சிரிக்கோனும்.. சிரிச்சதப் பாத்து மத்தவங்க யாரும் பயந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல..

24 September 2010

அவ்வ்வ்வ்வ்வ்....



இன்றிரவின் கனவினில்..


தனியே உறங்க முயலும்போது தான் 
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன
சிறு வயதில் சகோதரனுடன்
போர்வைக்குள் ஒளிந்துகொண்டு பார்த்த 
ஈவில்டெட் உருவங்களும்,
தோழியருடன் தியேட்டரில் 
பாதி நேரம் கண்ணை 
மூடிக்கொண்டே 'பார்த்து'விட்டு
சரியாக ஒரு வாரம் வரை
பயங்கொள்ளச் செய்த  
ரிங் படத்துச் சிறுமியும், 
இடையிலே பயந்ததால் 
கணினியில் நண்பர்களையழைத்து
உரையாடியபடியே பார்த்த 
யாவரும் நலம் டீவியும், 
பார்த்தவர்கள் எல்லோரும்
பயந்ததாகச் சொன்னதால் 
இன்னும் பார்க்காமலே விட்டிருக்கும் 
பாரா நார்மல் ஆக்டிவிட்டீஸ் படமும்,
மற்றும் இன்னபிற கற்பனைகளும்.. 

மன்னர்எப்பூடி?? ச்ச்சும்மா டெர்ரர் கெளம்புதுள்ள?

அமைச்சர்: ஆம் மன்னா! மாபெரும் வெற்றி இம்முறை!! மக்கள் எல்லோரும் பயந்து-தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.. இனி ஒரு பயபுள்ள கூட நம்ம ப்ளாக் பக்கம் தலை வைத்துப் படுக்காது!!

மன்னர்: அப்படியா? ஹாஹ்ஹா! பின்னிவிட்டோம் மந்திரியாரே.. அதுசரி, எந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்?

அமைச்சர்: தூக்கத்துல கண்ணு தெரியாம போறதுக்கு இலவசமா ஆலோசனை சொல்ற எடத்துக்கு...




************

ஆறுதலுக்கு...

டிஸ்க்ளெய்மர்: இங்கயே இப்பவே சொல்லிடறேன்.. இந்தப் பகுதியில் வரும் சம்பவம் மற்றும் இதில் வரும் மனிதர்கள் யாவும் கற்பனையே.. இதற்குப் பின்னர் யார் வீட்டிலாவது இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது!! 

அப்பாவி ரங்ஸ்: இன்னிக்கு என்ன சாப்பாட்டுக்கு?

தங்ஸ்: ம்ம்ம்.. புதினா சட்னி..

அ.ர: சட்னியா? அதெல்லாம் எங்க வீட்டுல இட்லி தோசைக்குத் தான் பண்ணுவாங்க.. சாப்பாட்டுக்கு செய்ய மாட்டாங்க.. 

த: இல்ல.. அது வேற இது வேற.. இது வேற மாறி பண்ணியிருக்கேன்..

அ.ர: (சுவைத்துப் பார்த்து விட்டு) இல்ல.. தொண்டைல அடைக்கறா மாதிரி இருக்கு.. வேணாம்.. ரசத்த எடு..

இரண்டு மாதங்கள் கழித்து,

அ.ர: இன்னைக்கு என்ன சாப்பாட்டுக்கு?

: (கொஞ்சம் கூட யோசிக்காமல்) புதினா துவையல்.. 

அ.ர: (சுவைத்துப் பார்த்து விட்டு) அட.. நீ துவையலெல்லாம் பண்ணுவியா? நல்லாயிருக்கே!! 


************




17 September 2010

ஆரவாரம்? ஆலிப்பு?? பேரிரைச்சல்?

இதற்கு என்னவென்று பெயரிட்டழைப்பது?

நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்..



ஏற்கனவே ஒரு முறை பார்த்தது தான்.. ஆனால் இந்த முறை சென்ற அளவுக்கு அருகில் செல்லவில்லை.. இந்த நாட்டிற்கு வரும் இந்தியர்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள்.. அவர்களுக்கு இந்த இடுகை புன்னகையை மட்டுமே வரவழைக்கும் என்று நினைக்கிறேன்.. மற்றவர்களுக்கு பிரமிப்பை வரவழைக்கலாம்.. 

ஏகப்பட்ட கூட்டம்.. அதில் எண்பது சதவிகிதம் இந்தியர்களே இருந்தனர்.. திருப்பதிக்கு வந்த மாதிரி இருக்கு என்று சலித்துக் கொண்டார் சகோதரர்.. 

மணிக்கணக்காக காத்திருந்து நிமிடக்கணக்கில் அருகினில் தரிசனம் கிடைத்து பின் சாரலில் நனைந்த  பொழுது ஒரு சிலிர்ப்பு உண்டாயிற்று..  அப்பொழுது எடுக்கப்பட்டது தான் இது.. கேமராவின் மீது தண்ணீர் விழவே, பயந்து அதை உறையின் உள்ளே வைத்து விட்டேன்.. இதிலேயே சில சொட்டுக்கள் தெறிப்பது தெரியும்.. அதுவும் நல்லதுக்குத் தான்.. இல்லையென்றால் முழுவதையுமே லென்ஸ் வழியே தான் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.. :)

பின்னொரு இடத்தில் மறுபடியும் நனைய வாய்ப்பு கிடைத்தது.. அதுவும், நேரடியாக அருவியில் இருந்து தெறித்து விழும் நீரில்.. அந்த உணர்வை என்னவென்று விவரிப்பது? மறுபடியும் வார்த்தை தடுமாறுகிறது.. ecstasy? அப்பா.. என்ன வேகம்.. இத்தனைக்கும் மிகக் குறைவான நீர் நம் மீது விழும்.. அதனை நோக்கியவாறு நின்றால் மூச்சு முட்டிவிடும்..  முதுகைக் காட்டியவாறு தான் நின்றாக வேண்டும்.. என்னமோ தெரியவில்லை.. இயற்கையின் வேகத்தை, அந்தச் சக்தியை,  நனைந்தவாறே கையெடுத்து கும்பிடத் தோன்றியது..  

இதில் குதித்து உயிருடன் மீண்டு வந்து சாதனை புரிய வேண்டும் என்று கொஞ்சம் ஆட்கள் முயன்றிருக்கிறார்கள்.. அநேகம் பேர் தப்பியதில்லை.. பிழைத்த சம்பவங்கள் இரண்டினைச் சொல்லிப் போகிறேன்.. சுமார் அறுபது வயது மூதாட்டி ஒருவர், மரப் பேரலின் உள்ளே பஞ்சு மெத்தை போட்டு, அதிலிருந்தவாறே உருண்டு வீழ்ந்திருக்கிறார்.. அவருடன் ஒரு பூனையும் :).. இருவரும் தப்பி விட்டார்கள்.. இன்னொரு சம்பவம் நெகிழ்ச்சியானது..  அக்கா தம்பி என இரு சிறுவர்கள், ஒரு படகோட்டியுடன் அருவிக்கு மேலே உள்ள ஆற்றில் பயணிக்கையில், படகு பழுதடைந்து விட, படகோட்டி இருவருக்கும் லைப் போட் மாட்டி விட்டு விட்டு படகைச் சரி செய்ய முயன்றிருக்கிறார்.. சிறுவன் அதற்குள் படகில் இருந்து விழுந்து, பின் அருவியில் இருந்து வீழ்ந்து.. அக்கா அவனைப் பார்த்து கதறியவாறே கரையோரமாக ஆற்றோட்டத்தில் அடித்து வரப்பட, வீழும் இடத்துக்கு சற்றே முன்னர் வேடிக்கை பார்க்க வந்த ஆட்களால் காப்பாற்றப் பட்டு விடுகிறார்.. அருவியில் வீழ்ந்த தம்பியும் சிறு காயங்களுடன் மட்டும் படகோட்டியவர்களால் கண்டெடுக்கப்பட்டு பிழைத்து விடுகிறார்.. ஆனால்.. படகோட்டியவர் உயிர் பிழைக்கவில்லை.. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தவறி விழுந்த இருவரும் பிழைத்து விடுகையில், சாதனை செய்ய முயன்றவர்களில் பெரும்பாலானோர் தப்பியதில்லை!!

இன்னொரு முறை சென்றால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. இதை விடவும் நன்றாக இருக்கலாம்.. இல்லை சலிப்பாகவும் தோன்றலாம்.. 

பி. கு:

ecstasy - இந்த வார்த்தையை இங்கு பிரயோகிப்பது சரி தானா என்ற சந்தேகம் வர, கூகிளில் போட்டுத் தேடிய போது வந்த விவரங்கள் வேறு..  எனவே அர்த்தம் தேடிப்பார்ப்பவர் யாரும் சந்துவை தவறாக நினைத்து விடாதீர்கள்.. :) ecstasy meaning என்று தேடியபின் ஓரளவுக்கு நிலைமை சரியானது.. :) ஏற்கனவே பூங்கதிர் தேசத்து தண்ணீரைக் குடித்து மயங்கிய ஆட்களெல்லாம் இருக்கிறார்கள்.. 


03 September 2010

இப்படித் தான் முடியும் இமா..

கெட்டுகெதர்ல பாதில திடீர்னு சந்தனா பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிக்கறா.. எல்லாரும் பதறிப் போயி அவ கிட்ட ஓடி வராங்க..


கூட்டத்தினர்: ஏன் சந்தனா என்னாச்சு?

சந்து: கெட்டுகெதர் ன்னு கூப்பிட்டாங்க இமா.. நானும் ஆசையா பக்லவா  கிடைக்கும்ன்னு ப்ளேன்ல கொடுத்த ரெண்டே ரெண்டு முந்திரிப் பருப்பக் கூட  சாப்பிடாம வந்தேன்.. இங்க வந்தா இப்பிடி ஆகிப்போச்சே.. 

கூட்டத்தினர்: உச் உச் உச் உச்..

சந்து: முதல் பாதி வரைக்கும் சிரிச்சுட்டே படிச்சேன்.. சதி புரியாம..


கூட்டத்தினர்: சதியா.. என்ன சதி?


சந்து: போச்சுடா.. இதையும் நான்தான் மொழி பெயர்த்துக் கொடுக்கனுமா? என்னிக்கோ நாம கத்துனத வீடியோ எடுத்து எல்லாருக்கும் போட்டு காமிச்சிட்டு இருக்காங்க இமா..


இப்போது கூட்டத்தினர் எல்லோரும் அழ ஆரம்பிக்கின்றனர்..


சந்து: சாப்பிடறதுக்கும் ஒன்னும் மிச்சம் வைக்கல.. பசிக்குது இப்போ..


எங்க விட்டா நம்ம கிட்ட கேட்டுடுவாளோன்னு கூட்டத்தினர் தங்கள் கையில் இருந்ததை அவசர அவசரமாக வாயில் போட்டு மெல்லத் துவங்குகின்றனர்..


சந்து: நான் தான் அன்னிக்கு ரொம்ப நேரம் கத்திகிட்டு இருந்தேன்.. இந்த உலகத்துல சில ஜீவன்கள் வழி தெரியாம வந்து வதைபட்டு கிட்டு இருந்ததே, பாவம் 
அதுகளுக்கு உதவி செய்யலாம்ன்னு தான்..


முன்னாள் மற்றும் இந்நாள் நட்சத்திரங்கள்: நல்ல வேளை, நீங்க அன்னிக்கு வந்து வழி சொன்னீங்க எல்போட்டு.... இல்லாட்டி இங்க நடந்த குழப்படில நாங்களே ஆஸ்பத்திரிக்கு வழி கண்டுபிடிச்சுப் போயி சேர்ந்திருப்போம்..


சந்து: அது கூட பரவாயில்ல.. இப்படியெல்லாம் நடக்கப்போகுதுன்னு தெரியாம நான் மறுபடியும் இன்னைக்கு வந்து கத்தி வச்சிருக்கேன்... இதையும் படமெடுத்து வச்சிட்டாங்களாம்..


கூட்டத்தினர்: அச்சோ பாவம் சந்து..


இடையில் இமா கூலாக ஒரு டிஷ்யூ எடுத்து வந்து தருகிறார்..


இமா: எனக்காக எடுத்து வச்சது சந்தனா.. கண்ண மட்டுந்தான் துடைச்சிருக்கேன்.. மூக்க இன்னமும் துடைக்கலை.. வேணும்னா எடுத்துக்கோங்க..


சந்து: ஹூம்.. எனக்கு வேணாம்.. புலி அழுதாலும் ஏற்கனவே யூஸ் பண்ணுன டிஷ்யு ல கண்ணத் துடைச்சுக்காது..


சந்துவின் பரிதாப நிலையைக் கண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் எல்லோரும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.. அப்போது பின்னாளில் இருந்து ஏதோ சத்தம் கேட்கிறது.. கூட்டத்தை விலக்கியபடி ஒருவர் முன்னாள் வருகிறார்..


ஜெய்லானி: மம்மோ பப்பானோ மம்மாமீயா..


சந்து: என்ன சொல்ல வரார் இவர்? ஒண்ணுமே புரியலையே?


இமா: எனக்காக எவ்வளவோ மொழி பெயர்த்திருக்கீங்க சந்தனா.. உங்களுக்காக இதைக் கூட செய்யலைன்னா எப்படி? அதூ.......


ஜெய்லானி: மாமீஈஈஈஈஈஈஈஈ!!


இமா: உங்க நிலைமை எவ்வளவோ பரவாயில்லையாம் சந்தனா.. வடை பிட்சா சட்னி எல்லாத்தையும் வாயில அள்ளிப் போட்டு இப்ப மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம இருக்கற இவர் நிலமைய விட..


சந்து: அடக் கொடுமையே.. இவரப் பாத்து எனக்கு இப்போ அழுகறதா இல்ல சிரிக்கறதான்னு தெரியலையே.. 


ஜெய்லானி: ஒஜ்ஜு ஜந்தேஜம் ஜன்த்தனா.. அஜுதா முஜ்ஜுல ஜேன் ஜன்னி வஜ்து?


இமா: போச்சுடா.. மருமகனுக்கு மறுபடியும் சந்தேகமா? சந்தனா.. நீங்க அழுதா மூக்கால வர்ற தண்ணி, சிரிச்சா மறுபடியும் கண்ணுக்கே போயிடுமான்னு கேக்கிறார்.. 

இதற்கு மேல் அங்கு நின்றால் "கண்ணீர்ப்" புரையேறிடுமோ  என்ற பயத்தில், சந்தனா மற்றும் கூட்டத்தினர் கலைந்து ஓட ஆரம்பிக்கின்றனர்..