Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

17 February 2010

காலண்டர் வாசகங்கள்....

தோழியொருவருடைய வீட்டில் இருந்த 2009 காலண்டரில் நான் கண்ட வாசகங்கள்.. ஆங்கிலத்தில் இருந்தன.. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு வாசகம்.. சிந்தனையாளர்களால் சொல்லப்பட்டவை.. அதற்கேற்றவாறே எடுத்திணைக்கப்பட்ட அழகான இயற்கைப் புகைப்படங்களுடன், ரசனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது...


பிடித்ததால் பகிர்ந்து கொள்கிறேன்..  
 
ஜனவரி:

Family is one of nature's masterpieces

(குடும்பமெனும் கட்டமைப்பில் நம்பிக்கையுண்டு.. வழிமொழிகிறேன்.. )

- George Bernard Shaw




ஃபிப்ரவரி:

கிழித்து உபயோகித்து விட்டார்கள்... :))


மார்ச்:

A man is not old until regrets take the place of dreams.

(வருத்தங்கள் கனவுகளின் இடத்தைப் பெறும் வரை மனிதனுக்கு வயதாவதில்லை. நான் எடுத்துக்கொண்டபடி - கனவிருக்கும் வரை மனிதனுக்கு வயதாவதில்லை. நல்லாயிருக்கே.. எனவே, ஸ்டார்ட் ட்ரீமிங்...)
- John Barrymore




ஏப்ரல்:

The price of greatness is responsibility 

(சரி தான்.. அதுக்கு பயந்துதானே க்ரேட் ஆக வேண்டாம்ன்னு முடிவுபண்ணியிருக்கோம்.. :))) )

- Winston Churchill


மே:

Adopt the pace of nature, her secret is patience

(பொறுத்தார் பூமியாள்வார்.. அதத் தானுங் சொல்றீங்... பிடிச்சிருக்கு)
 - Ralph Waldo Emerson






ஜூன்:

The purpose of life is not to be happy. It is to be useful, to be honorable, to be compassionate, to have it make some difference that you have lived and lived well

(என்னால் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..)

  - Ralph Waldo Emerson







ஜூலை:

Everything has beauty, but not everyonse sees it..

(ரொம்ப பிடிச்சிருக்கு.. அப்ப எங்களையும் அழகுன்றீங்க.. ஏக மனதா ஒத்துக்கறோம்.. )

- Confuscius



ஆகஸ்ட்:

The first step toward success is taken when you refuse to be a captive of the environment in which you first find yourself

(யோசித்துப் பார்த்தால் சரியென்றே தோன்றுகிறது..)

- Mark Caine



செப்டெம்பர்:

True prosperity is the result of well-placed confidence in ourselves and our fellow man.

(சரிதான்..)

- Robert Burton




அக்டோபர்:

The only true wisdom is in knowing you know nothing

(ஹா ஹா.. சாக்ஸ் உண்மைய இப்படி போட்டு உடைச்சிட்டாரே..)

- Socrates





நவம்பர்:

Faith is to believe what you  do not see; the reward of faith is to see what you believe.

(பிடிச்சிருக்கு.. ஆனா எல்லாவாட்டியும் நடக்கறதில்லயே..)

- Saint Augustine




டிசம்பர்:
Courage is the ability to go from failure to failure without losing enthusiasm

(ஹா.. ஹா.. அதுக்கு இப்படியொரு அர்த்தம் இருக்குங்ளா? சரியாத் தான்ஞ் சொல்லியிருக்கீங்ணா)

- Winston Churchill






பி. கு: வாசகந்தேன் அவியளுது.. படமெல்லாம் எல்போர்ட் எடுத்ததுங்கோ..

10 January 2010

தோல்வியின் வெற்றி.. 4

சாது அந்த வழிப்போக்கனுக்கு உதவ முன்வந்து அவனைத் தன் குதிரையின் மேலேற்றி தானும் ஏறத் தயாரானார்..

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி

ஆம்.. நீங்கள் எதிர்பார்த்ததே தான் அப்போது நடந்தது..

அந்த வழிப்போக்கன் அவரைக் கீழே உதறித் தள்ளிவிட்டு குதிரையை விரட்டிச் சென்றான்.. சாது நிகழ்வதறியாது குழம்பி நின்றார்.. குதிரை சிறிது தொலைவு சென்றதும், திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தான்..

உங்கள் குதிரையைக் களவாடுவதே என் நோக்கம்.. நிறைவேற்றிவிட்டேன்.. வருகிறேன்..

சாதுவிற்க்கு இப்போது நடந்ததனைத்தும் விளங்கியது..

குதிரையில் கிளம்ப ஆரம்பித்தவனை நோக்கி கத்தினார்..

நில்.. நான் சொல்வதை ஒரு நிமிடம் கேட்டு விட்டுச் செல்.. இதில் ஏதும் உள்நோக்கமில்லை..

ம்ம்ம்.. சீக்கிரம்..

என் குதிரையை நீயே வைத்துக் கொள்.. ஆனால், ஒரே ஒரு கோரிக்கை.. நிறைவேற்றுவாயா?

என்ன.. சொல்லுங்கள்..

வேறொன்றுமில்லை.. இனி ஒருவரைக் களவாடுவதாகயிருந்தால், நேரடியாக அவரிடத்தில் சென்று திருடிவிடு.. இது போல் நாடகம் நடத்தாதே..

????!!!!!!!

நடந்த இந்தச் சம்பவம் என் மனதை விட்டு மறையாது.. இனி எவன் என்னிடம் உதவி கேட்டாலும், அவனை சந்தேகக் கண் கொண்டு தான் பார்ப்பேன்.. என்னால் எந்த வழிப்போக்கனுக்கும், ஊனமுற்றவனுக்கும் உதவ முடியாதபடி செய்துவிட்டாய்.. உண்மையாலுமே யாருக்காவது உதவி தேவைப்பட்டாலும், என்னால் உதவ முடியாது.. இது என்னோடே போகட்டும்... இன்னுமொரு மனிதனின் மனத்தில் இது போன்ற வலியையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடாதே..

சொல்லி முடித்துவிட்டீர்களா?

ம்ம்..

நன்றி.. நான் செல்கிறேன்..

திருடன் தன் இருப்பிடத்தை நோக்கி குதிரையைச் செலுத்தினான்..

சாது மெல்ல தன் வீட்டிற்க்கு நடந்து வந்து சேர்ந்தார்.. குதிரை கட்டுமிடத்தைப் பார்த்ததும் மீண்டும் வலி ஏற்ப்பட்டது.. உறங்கிப் போனார்..

நடுநிசியில் குதிரை கனைக்கும் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து வந்து பார்த்தார்.. அவருடைய குதிரை அங்கு நின்று கொண்டிருந்தது.. கூடவே ஒரு ஓலையில் திருடரின் வாசகமும்..

என்னிடம் குதிரையை இழந்து நீங்கள் தோற்றதின் விளைவு பன்மடங்காகப் பெருகி அப்பாவிகளை பாதிக்கக் கூடும் என்று உணர்வதால்..

இம்முறை நான் தோற்க்கிறேன்.. நீங்கள் வெல்கிறீர்கள்..

Example

கதை இத்துடன் முடிந்தது..

கதைக்கும் ஸ்கேட்டிங் சிறுவனுக்குமான தொடர்பை என் பார்வையில் அடுத்து சொல்லுகிறேன்..

தோல்வியின் வெற்றி... 3

சாது, குதிரை, மற்றும் திருடரின் பெயர்கள் வெகு நாட்களாக நினைவில் இருந்தன.. பின் மெல்ல மெல்ல மறைந்தன.. இருந்தாலும், கதையின் கருத்து நினைவில் உள்ளது..

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

இப்போ மறுபடியும் கதைக்கு........

யார் மூலமாகவோ சாது ஒரு நாள் தொலைதூரப் பயணம் மேற்க்கொள்ளவிருக்கிறார் என்று திருடர் அறிந்துகொண்டார்.. புத்தியைத் தீட்ட ஆரம்பித்தார்..

திருடர் எதிர்பார்த்த நன்னாள் வந்தது.. அன்று அந்தி வேளையில் குதிரையின் மீதேறி சாது தன் பயணத்தை துவக்கினார்..

Example

யாருமற்ற பிரேசத்தில் அவர் பயணிக்கையில் ஒரு காட்சியைக் கண்டார்.. நடுத்தர வயது மனிதரொருவர் வழியோரமாய்க் கிடந்தார்.. சாதுவை நோக்கி கைகளையாட்டி அவர் ஏதோ முனகினார்.. அவரை அந்த நிலையில் கண்டதும்,சாது குதிரையை திருப்பி, நிறுத்தி, இறங்கிச் சென்று, அவரிடத்தில் வினவினார்..

மகனே, இந்நேரத்தில் இங்கென்ன செய்து கொண்டிருக்கிறாய்?

அய்யா.. எனக்கோர் உதவி செய்வீர்களா?

சொல்லப்பா..

நான் ஊனமுற்றவன்.. கால்கள் செயலிழந்துவிட்டன.. ஊரொன்றுக்கு செல்லும் வழியில் நான் வழிதவறி இங்கு வந்துவிட்டேன்.. சில வழிப்பறி கொள்ளைக்காரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு என்னுடைய குதிரை வண்டியையும் என்னுடைய பொருட்களையும் பறித்துக் கொண்டு என்னை இந்த யாருமற்ற வனத்தில் தள்ளிவிட்டு சென்று விட்டனர்..

சாதுவின் முகத்தில் துயரம் படர்ந்தது..

எங்கு செல்ல வேண்டுமெனச் சொல்.. நானுனக்கு உதவி செய்கிறேன்..

வழிப்போக்கர் தன் ஊரின் பெயரைக் கூறினார்..

சாதுவும் அவரை பத்திரமாக கொண்டு சென்று சேர்ப்பது தனது பொறுப்பென்று உறுதிமொழியளித்து அவரைத் தூக்கி தன் குதிரை மேல் உட்கார வைத்தார்.. தானும் மேலேற தயாரானார்..

(தொடரும்..)

தாங்க முடியலீங்க இவங்க பில்டப்பு னு என்னோட வாசகப் ”பெருமக்கள்” புலம்புவது கேட்குது.. சாரி, ஏற்க்கனவே இந்த மாதிரி எழுதி வச்சுட்டேன்..சாயந்திரம் கடைசி பார்ட் ரிலீஈஈஈஸ் பண்ணிடறேன்..

09 January 2010

தோல்வியின் வெற்றி..

கதையின் முதல் பகுதியை இங்கு கண்டோம்..

முதல் பகுதி

ஒரு வாரத்துக்கு முன்பு, இதே போன்ற ஒரு விடுமுறை நாள்.. நான் மதியம் வீட்டில் படித்துக் கொண்டு இருந்தேன்.. இம்முறையும் தனியே.. தனித்திருக்கும் போது நடக்கும் சம்பவங்கள் மனதில் பதிந்துவிடுகின்றன போலும்..

திடீரென்று கதவுடைபடும் அளவுக்கு ஒரு சத்தம் கேட்டது..

நான் வழக்கம் போலவே பயந்து போனேன்.. யாரேனும் திருடர்கள் வந்துவிட்டனரோ என்று.. இருக்கையிலிருந்து எழவே மனமில்லை.. என்னுடைய செல்போனைக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு மேலும் சில வினாடிகள் கதவைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தேன்..

மேற்க்கொண்டு எந்தச் சத்தமும் எழவில்லை.. சற்று நடுக்கத்துடன் கதவின் லென்ஸ் வழியே எட்டிப் பார்த்தேன்..

அங்கே ஒரு சிறுவன் ஸ்கேட்டிங் போர்டுடன் விழுந்து கிடந்தான்..

கதவைத் திறப்பதா வேண்டாமா என்று ஒரே யோசனை.. ஜன்னல் வழியே வெளியே நோக்கினால் வேறு யாரும் தென்படவில்லை..

லென்ஸ் வழியே மறுபடியும் பார்த்தேன்.. சிறுவனிடத்தில் எந்த அசைவும் இல்லை..

பின் ஒரு வழியாக மனதை திடப்படுத்திக்கொண்டு, கதவினை பாதி திறந்து வைத்து, அவனிடம் பேசினேன்.. ஆங்கில உரையாடல்.. தமிழில்..

என்னப்பா, என்னாயிற்று உனக்கு..

ஒன்றும்மில்லை..

இப்படி விழுந்து கிடக்கிறாயே..

மன்னித்துக் கொள்ளுங்கள்.. உங்கள் கதவின் மீது மோதி சப்தம் எழுப்பி விட்டேன்..

எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது..கதவை இன்னும் சற்று திறந்து அவனை நோக்கினேன்..

பதின் வயதுக்காரன்.. காலில் ஸ்கேட்டிங் போர்ட் அணிந்திருந்தான்.. தலையில் ஹெல்மெட்.. கை, கால் இரண்டுக்கும் போதிய அளவு பேட் வைத்துக் கட்டியிருந்தான்.. இப்பொழுது தான் என்னால் அவனைப் பார்த்து புன்னகைக்க முடிந்தது.. ஹைஸ்கூல் சிறுவனென்றாலும், என்னுடைய அச்சம் முழுதும் அகலவில்லை..

Example

இப்போ எப்படியிருக்கிறது?

பரவாயில்லை..

நான் உன்னைத் தூக்கி விடட்டுமா?

இல்லயில்லை.. நானே எழுந்து கொள்வேன்..

எங்கிருக்கிறது உன் வீடு?

இதே காம்ப்ளக்சில் தான்..

பேசியவாறே கைகளைக் கீழே ஊன்றி மெல்ல எழுந்து நின்றான்.. அவனருகில் வந்தேன்..

உன்னால் கை கால்களை நன்றாக அசைக்க முடிகிறதா? எங்கேனும் வலியிருந்தால் சொல்..

எனக்கொன்றுமில்லை.. நன்றாகத் தான் இருக்கிறேன்.. (இந்த வயதுக் குழந்தைகள் பயமறியாக் கன்றுகள்..)

நடந்து பார்த்துச் சொல்.. (ஏதேனும் ஃப்ராக்சர் ஆகியிருக்குமோ என்ற கவலை எனக்கு..

ஒன்றுமில்லை..

நடக்க முடியுந்தானே?

ம்ம்..

வீடு வரை உடன் வரவா?

வேண்டாம்.. நானே சென்று விடுவேன்..

மெல்ல நடக்க ஆரம்பித்தான்..

உன் அப்பா அம்மாவிடம் மறக்காமல் நடந்ததைச் சொல்லிவிடு.. வலியேதுமிருந்தால், மருத்துவரிடம் சென்று வாருங்கள்..

நன்றி..

அவன் சென்று விட்டிருந்தான்..

நான் வீட்டுக்குள் வந்து கதவை தாழிட்டேன்.. எனக்குள் சிறு குற்ற உணர்வு எழும்பி மறைந்த வண்ணமிருந்தது..

(தொடரும்..)

இந்தச் சம்பவம் தான் இத்தனை நாள் கழித்து கதை நினைவில் வரக் காரணம்.. அதான்.. சொல்லிவிட்டேன்..

08 January 2010

தோல்வியின் வெற்றி

சிறு வயதில் படித்த வேற்று மொழிக் கதை..

ஒரு ஊரில் ஒரு சாது இருந்தார்.. நல்லவர்.. வல்லவர்.. இத்யாதி.. இத்யாதி..

அவரிடம் ஒரு குதிரை இருந்தது..

அவர் அந்த குதிரையின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.. தன் குழந்தையாக அதனை எண்ணி வளர்த்து வந்தார்..

குதிரை திறம் மிகுந்தததாகவும், கம்பீரமான உருவத்துடனும், காண்பவரை கொள்ளை கொள்வதாகவும் இருந்தது..

அதே ஊரிலோ இல்லை அதற்க்கு அடுத்த ஊரிலோ ஒரு திருடரும் வசித்து வந்தார்..

சாதுவின் குதிரை மீது அவருக்கு எப்போதுமே ஒரு கண் இருந்தது.. அதனை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என உவகை கொண்டிருந்தார்..

என்ன காரணத்தினாலோ சாதுவின் இடத்துக்கு சென்று அதனை அபகரிப்பது அவருக்கு சிரமமாக இருந்தது..

எனவே, அதற்க்கானதொரு திட்டம் தீட்டி, சரியானதொரு சந்தர்ப்பம் வாய்க்க காத்திருந்தார்..

சந்தர்ப்பமும் ஒரு நாள் வாய்த்தது..

(தொடரும்..)

ம்கும்ம்ம்.. இத படிக்கறதுக்கே ஒரு ஆளக் கூடக் காணோம்.. இதுக்கு சஸ்பென்ஸ் வேற ஒரு கேடா ன்னு உள்ளுக்குள்ள ஒரு குரல் கேட்குது :) இருந்தாலும், ஒரு ஸ்பெஷல் எஃபக்ட் வேண்டாமா? :)

Example