09 June 2011

ஊர்சுற்றி 3....

நாங்க போன வாட்டி ஊருக்குப் போயிருந்தப்போ, கணவர் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ஜோடி குடி வந்திருந்தாங்க.. புதுசாக் கல்யாணம் ஆனவங்க.. காதல் திருமணம்.. பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து போராட்டங்களுக்கிடையே வாழ்க்கைய நடத்திகிட்டு இருந்தாங்க.. அதுக்கிடையிலும் நாங்க கிளம்பும் போது எங்களுக்காக ரெண்டு பொம்மைகள் வாங்கித் தந்தாங்க.. அந்த ரெண்டும் இங்க எங்க வீட்டுல தான் இருக்கு.. இந்த வாட்டிப் போயிருந்தப்போ எப்படி இருக்காங்கன்னு வீட்டுல கேட்டதுக்கு, அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க, இப்ப விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க.. அதிர்ச்சியா இருந்தது.. அதுக்குள்ளேயான்னு.. அந்த ஆணோட குடி, சந்தேகம், நடவடிக்கை சரியில்ல, மனைவி மீதான வன்முறை - இதனால மனைவி தனியாப் போயிட்டதாவும், அந்தக் கணவர் அவங்களைச் சமாதானம் செய்றதுக்காக அவங்க வீட்டு முன்னாடி காத்துக் கெடக்கறதாவும் சொன்னாங்க.. அதுக்காக இருக்காரோ இல்ல வேற வாழ்க்கைய ஆரம்பிச்சிரப் போறான்னு காவல் இருக்காரோ தெரியல..  இனிமே அவரோட வாழுறது கஷ்டம், அதனால பிரிஞ்சுட்டாங்கன்னு புரிஞ்சாலும், என்னால அதைச் சாதாரணமாக் கடந்து போக முடியல, ஏன்னா இங்க மாதிரி இல்ல, அங்க காதலைத் திருமணம் வரைக்கும் கொண்டு போறதுக்கே, பொருளாதாரம் பெற்றோர் சம்மதம்ன்னு நிறைய இடையூறுகள்.. அதனாலேயே அப்படிப் போராடிக் கல்யாணம் பண்ணி உறுதியா வாழ்றவங்கள எனக்குப் பிடிச்சுப் போகும்.. இப்ப இவங்கள நினைச்சு, இதுக்காகவா இவ்வளவு போராட்டங்களைத் தாண்டி வந்தாங்கன்னு  கஷ்டமா இருக்கு..

எங்க ஊர்ல நானிருக்கும் போது ஒரு கொலை நடந்துருச்சு.. காரணம், மனைவியோட கள்ளக்காதல் ன்னு சொன்னாங்க.. கணவரே போயிச் சரண்டர் ஆயிட்டு எதோ டயலாக் விட்டிருக்கார்,  தான் செஞ்சது சரி தான் அப்படின்ற மாதிரி.. ஹ்ம்ம்..

எங்க உறவினர் ஒருத்தர் மண்புழுவை வச்சு இயற்கை உரம் தயாரிக்கறதுல ஈடுபட்டிருக்கார்.. அவர் கிட்ட விவரமாப் பேச நேரம் கிடைக்கல.. சுருக்கமா, ரசாயன உரம் போடாம அதை மட்டும் போட்டு விளைவிச்சா உற்பத்தி பாதிக்கப்படாதான்னு கேட்டேன்.. அந்தளவுக்கு பாதிக்கப்படாதுன்னு தான் சொன்னார்.. அடுத்தவாட்டி போறப்போ தீர விசாரிக்கணும்..

ஊர்ல அத்தை (மாமாவோட மனைவி) கம்பு ஆக்கித் தந்தாங்க.. அதை நீராகரமா சாப்பிட்டோம், பிடிச்சிருந்தது.. அந்தக் காலத்துல எல்லாம் சோளம் ராகி கம்பு தான் முக்கியமான உணவாம்.. அரிசிச் சோறு எல்லாம் அப்பப்பத் தான் இருக்குமாம்.. கம்பைச் சமைக்கறதுக்காக தயார் செய்யறதே பெரிய வேலையா இருக்கு.. அதைச் சுத்தம் செய்து, உரல்ல இடிச்சு, புடைச்சு, தவிடு நீக்கி, குருனையாக்கி.. அதுக்கப்புறமா சமைக்கணும்.. இதெல்லாம் என்னால ஆகற காரியமா??

ஹமாம் போட்டா rashes, allergy இதெல்லாம் வராதாம்.. காம்ப்ளான் சாப்பிட்டா பசங்க உயரமா வளருவாங்கன்னு விஞ்ஞானப்பூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்காம்.. அப்புறம் முக்கியமா, முன்னாடியெல்லாம் சிகப்பழகு நாலு முதல் ஆறு வாரங்கள்ல கிடைச்சிட்டு இருந்தது.. இப்பல்லாம் ஒரே வாரத்துல கிடைச்சுடுதாம்.. ஏனோ தெரியல, அங்க இருக்கும் கடந்து செல்ல நேரிட்ட ஒரு முதிய வறிய கிளி ஜோசியர் நினைவில வந்து போனார்.. இப்படியெல்லாம் சொல்லுறதால நான் இதுல எதையுமே உபயோகித்திருக்காத ஆளுன்னு நினைச்சுடாதீங்க.. சோப்பு போட்டுக் குளிச்சா புத்துணர்வா இருக்கும், அழுக்குப் போகும், உங்க தோல் தன்மைக்கேத்த சோப் - இப்படியெல்லாம் சொன்னா ஓகே.. அதைய விட்டுட்டு.. rashes, allergy எல்லாம் வராம இருக்கறதுக்கு அதென்ன மருந்தா?

வால்மார்ட் மாதிரி பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்னு சங்கிலித் தொடரா ஒவ்வொரு ஊருலயும் வர ஆரம்பிச்சிருக்கு.. தென்மாவட்டத்துப் புள்ளைங்க வேலை செய்யறாங்க.. அங்காடித் தெரு நினைவு வந்ததுன்னு சொல்லித் தான் தெரியனுமா?

நெருங்கிய உறவினர் ஒருத்தர் வீடு கட்டப் போறதாச் சொன்னாங்க.. இப்பல்லாம் எஞ்சினியர்களே வாஸ்துவையும் உள்ளடக்கிக் கட்டிக் கொடுக்கறாங்களாம்.. வெளிய திண்ணை வச்சுக் கட்டச் சொன்னேன், அதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷனாம்.. அதுக்குப் பெரிய விவாதமே நடந்தது.. தெரியல, வீடுன்றது பல காலம் வாழப் போற இடம்.. தோற்றத்தை விட, நம்மோட வாழ்க்கை முறைகளை வசதிகளை முன்னிறுத்தி கட்டப்படனும்ன்னு நான் நினைக்கிறேன்.. இது ஒரு சின்ன உதாரணம் தான்.. இப்ப இருக்கிற வீட்டுல திண்ணை இருக்கு, பாட்டியால கீழ உட்கார முடியாது, சமையல் வேலைகள அதுல உட்காந்து செஞ்சுகிட்டு இருக்காங்க.. சாயந்திரம் மின்சாரம் இல்லாத நேரம் எல்லோரும் வெளிய வந்து உட்காந்து பேசறாங்க.. காய்க்காரம்மா வந்தாங்கன்னா கூடைய இறக்கி வச்சு உட்காந்து தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு வித்துட்டுப் போறாங்க.. பெரியவங்க யாராச்சும் கடந்து போனா உட்காந்து பேசிட்டுப் போறாங்க.. ஏன் அதை அவுட் ஆஃப் ஃபேஷன்னு விட்டுத் தரனும்?

இன்னொரு விவாதம் டாய்லட்களைப் பத்தி.. இந்தியனா வெஸ்டேர்னான்னு.. வயசான காலத்துல மூட்டு எல்லாம் தேஞ்சு போன பின்னாடி வெஸ்டேர்ன் தான் நல்லது, ஆனா ஒரு விஷயம் இடிக்குதே.. இங்க பேப்பர்  வச்சிருக்கான், எங்கயும் தண்ணி சிந்தாது.. அங்க அதுக்கேத்த மாதிரி ஒரு wired  ஷவர் வச்சாத் தானே சரி வரும்? இல்லாட்டி உக்காரும் இடம் அல்லது தரை அசுத்தம் ஆகிடாது?? வீட்டுல கூடப் பரவாயில்ல, பல பேரு உபயோகப்படுத்தற ஹாஸ்டல்ல இப்படிக் கட்டி வச்சுக் கொடுமப் படுத்துவாங்க.. ச்சை..
 
அம்மா ஆட்சி மலர்ந்தவுடனே மின்சாரத் தடைகள் குறையும்ன்னு நினச்சா, அந்த முதல் வாரம் கண்டபடிக்கு நிறுத்தி வச்சுட்டாங்க, அதும் இரவுல விட்டுவிட்டுப் போகும், கொசுக்களுக்கு ஒரே கொண்டாட்டமாப் போச்சு.. தூங்கவே முடியல.. இனிமே அவங்கவங்க வீட்டுத் தேவைக்கு அவங்களே உற்பத்தி செஞ்சுகிட்டாத் தான் உண்டு போல.. சூரிய ஒளி ல மின்சாரம் தயாரிக்கறதப் பத்திப் படிச்சுப் பாக்கணும், நாமே ஒன்னு வாங்கி நிறுவிக்க முடியுமான்னு.. இது மாதிரி விஷயங்களை எல்லாம் இலவசமாத் தந்தாங்கன்னா புண்ணியமாப் போவும்..

நான் பார்த்து வியந்த ஒரு விஷயமும் இருக்கு.. ரெம்ப பெருசா போயிடும் என்பதால அது அடுத்த இடுகையில..

கிளம்பற அன்னைக்கு ஒரு நண்பரை சந்திச்சோம்.. நாங்க மாறவே இல்லைன்னு சொன்னார்.. தோற்றமும் பேச்சும் அவ்வளவா மாறல தான், அதையத் தான் சொல்லியிருக்கார்..  சிந்தனைகள்ல கண்டிப்பா மாற்றம் ஏற்பட்டிருக்கு.. இன்னொரு நாட்டுக்கு வர்றோம், அங்க இருக்கிற விஷயங்களையும் உள்வாங்கி அலசி வளர்றது தானே இயல்பு?  ஆனா சில விஷயங்கள்ல நான் மாற விரும்பல,  எதை எடுத்துக்கணும் எதை விடனும்ன்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான்..

இன்னும் நாலஞ்சு வருஷத்துல ஊர் திரும்பிடலாம்ன்ற எண்ணம் தான் இப்போதைக்கு எனக்கு.. வேலை நிலவரம் குறித்து விசாரித்தப்போ, தனியாரிடத்திலே ஓரளவுக்கு இங்கிருப்பது போன்ற டெக்னாலஜி இருப்பதாக அறிந்தோம்.. ஆனால் பெற்றோர் இருக்குமிடத்திலே வேலை வாய்ப்பு saturated  ஆக இருக்கும் என்று தோன்றுகிறது. வேறேங்காவதும் சிறிது காலம் வசிக்க நேரிடலாம்.. ம்ம்.. பார்ப்போம்..

17 comments:

  1. //நான் பார்த்து வியந்த ஒரு விஷயமும் இருக்கு.. ரெம்ப பெருசா போயிடும் என்பதால அது அடுத்த இடுகையில.. // அப்படீன்னா..இன்னும் ஊர் சுத்தி முடியலையா? அம்மாடியோ! 3 வாரம் போனதுக்கே இப்படின்னா.... :) ;) :)

    தொடருங்கம்மிணி! :)

    ReplyDelete
  2. அதும் இரவுல விட்டுவிட்டுப் போகும், கொசுக்களுக்கு ஒரே கொண்டாட்டமாப் போச்சு.. தூங்கவே முடியல.. இனிமே அவங்கவங்க வீட்டுத் தேவைக்கு அவங்களே உற்பத்தி செஞ்சுகிட்டாத் தான் உண்டு போல.. சூரிய ஒளி ல மின்சாரம் தயாரிக்கறதப் பத்திப் படிச்சுப் பாக்கணும், நாமே ஒன்னு வாங்கி நிறுவிக்க முடியுமான்னு.. இது மாதிரி விஷயங்களை எல்லாம் இலவசமாத் தந்தாங்கன்னா புண்ணியமாப் போவும்.. ///

    இதெல்லாம் இலவசமா குடுக்க மாட்டாங்க, சந்தூ.
    சோலார் பவர் மூலம் ஏதாவது செய்தா தான் விடிவு கிடைக்கும். வெய்யில் டைம் கரண்டும் இல்லாவிட்டா கடுப்பா வரும்.
    அந்த திண்ணை ஐடியா சூப்பர் தான். இப்பெல்லாம் ஸ்டைலா வீடு கட்டுறவங்க திண்ணை பற்றி நினைப்பது கூட இல்லை.
    மீதியும் போடுங்க.

    ReplyDelete
  3. காதல் திருமணம் - அதிகமா கவனிக்கப் படுவதாலே, ரொம்ப கவனமா இருக்க வேண்டியிருக்கும். பெற்றோர் நடத்தும் திருமணங்களில் பிரிவு நேர்ந்தா, செய்தி ஆகாது. ஆனா, காதல் திருமணங்களில், ஒரு சின்ன பிளவுகூட அவலாகும். மன உறுதியும், வலிமையும் ரொம்ப அவசியம்.

    திண்ணை - அதுக்குப் பதிலாத்தானே, வராண்டா வக்கிறாங்க?

    //அத்தை (மாமாவோட மனைவி) //

    அப்படியா? எப்போலேர்ந்து? இதுலயும் மாற்றமா? ;-))))))

    ReplyDelete
  4. சூப்பர் ரவுண்டு அப்... கொஞ்சம் பொறாமையா இருக்கு உங்கள பாத்தா... எவ்ளோ மேட்டர் ஒரே போஸ்ட்ல கவர் பண்றீங்க... எனக்கு ஒரு விஷயம் சொல்றதுகுல்லையே போஸ்ட் ஏழு மொழத்துக்கு போயிருது... அவ்வவ்... brevity is never my cup of tea...hmmm..:))

    ReplyDelete
  5. அதைச் சுத்தம் செய்து, உரல்ல இடிச்சு, புடைச்சு, தவிடு நீக்கி, குருனையாக்கி.. அதுக்கப்புறமா சமைக்கணும்.. இதெல்லாம் என்னால ஆகற காரியமா??//

    Now we get it to ready mix. Try it. good.

    ReplyDelete
  6. //மண்புழுவை வச்சு இயற்கை உரம்// முன்பே சொல்லி இருக்கீங்க. கட்டாயம் விபரம் போடுங்க. நானும் சின்..னதா வளர்க்கிறேன். ஏதாச்சும் வித்தியாசம் இருக்கான்னு பார்க்கணும்.

    //ஹமாம் போட்டா rashes, allergy இதெல்லாம் வராதாம்.// எங்க விடுமுறைலயும் இதுவும் ஒரு டாபிக். ;)) ஆட் வரப்ப எல்லாம் சின்னவர் சிரிப்பார். ;)

    அதே போல //அங்காடித்தெரு//வும் நினைவு வந்தது. ;)

    நாங்க போனப்ப மின்சாரத் தடை இருக்கல.

    //சில விஷயங்கள்ல நான் மாற விரும்பல// ம்.. கொஞ்சம் முன்னாடிதான் எனக்கு மேல் மாடி காலின்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப நிரம்பற மாதிரி இருக்கு. ;) 'எல்லாத்துக்கும்' தாங்ஸ் சந்தூஸ்.

    இப்படிக்கு முழுநிலா ;)

    ReplyDelete
  7. என்னது இது ஒரு மாசம் தொடரா போட வேண்டியதை ஒரு போஸ்டிலேயே போட்டுட்டீங்க :-))

    தின்னைக்கு நீங்க குடுத்த விளக்கம் சூப்பர் :-)

    ReplyDelete
  8. அழகான படைப்பு...சுவாரசிகமான கதை,,,,
    வாழ்த்துக்கள்,,,,



    can you come my said?

    ReplyDelete
  9. முதல் 2 செய்திகளில் ஒண்ணு பிரிவில் முடிந்த 'காதல்' கல்யாணம், இன்னொன்னு கள்ளக் 'காதல்'னால நடந்த கொலை. ஹ்ம்... ஒண்ணும் சொல்றதுக்கில்ல சந்தனா! என்ன சொன்னாலும் திருந்துறவங்கதான் திருந்துவாங்க.

    //வீடுன்றது பல காலம் வாழப் போற இடம்.. தோற்றத்தை விட, நம்மோட வாழ்க்கை முறைகளை வசதிகளை முன்னிறுத்தி கட்டப்படனும்ன்னு நான் நினைக்கிறேன்..//

    நீங்க நினைத்த மாதிரிதான் நானும் நினைத்தேன்/கட்டினேன். 2 வாரம் உட்கார்ந்து கழுத்து வலிக்க புளூ பிரிண்ட் மாதிரியே போட்டு அனுப்பி, ஃபோனிலும் அதற்கு தனியா க்ளாஸ் போலவே எடுத்தோம் அவங்களுக்கு. 'உடையவங்க‌ இல்லாட்டா ஒரு முழம் கட்டை'ன்னு சொல்ற மாதிரி நாங்க நினைத்த நிறைய விஷயத்தை மாற்றிட்டாங்க :( முக்கியமா எலிவிஷன் சுத்தமா போச்சு!

    //சூரிய ஒளி ல மின்சாரம் தயாரிக்கறதப் பத்திப் படிச்சுப் பாக்கணும், நாமே ஒன்னு வாங்கி நிறுவிக்க முடியுமான்னு..//

    அதற்கான காலம் விரைவில் வந்துடும் சந்தனா.

    உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

    http://payanikkumpaathai.blogspot.com/2011/07/blog-post_13.html

    உங்களுக்கு முடியும்போது எழுதுங்க.

    ReplyDelete
  10. //முதல் 2 செய்திகளில் ஒண்ணு பிரிவில் முடிந்த 'காதல்' கல்யாணம், இன்னொன்னு கள்ளக் 'காதல்'னால நடந்த கொலை. ஹ்ம்... ஒண்ணும் சொல்றதுக்கில்ல சந்தனா! என்ன சொன்னாலும் திருந்துறவங்கதான் திருந்துவாங்க.//

    அஸ்மா.. நான் காதல் திருமணத்துக்கு ஆதரவான ஆளு.. படிக்கும் காலத்துல நண்பரா இருந்து அப்புறம் காதல்வயப்பட்டு திருமணம் செய்து இன்னி வரைக்கும் நல்லா இருக்கவங்களும் இருக்காங்க.. இப்பவோ அப்பவோ பிரிஞ்சு போனவங்களும் இருக்காங்க.. என் வருத்தம், போராடிச் சேர்ந்தவங்க நிலைக்காம போயிட்டாங்களே ன்னு தான்.. மனிதர்களைப் பொறுத்து தான் வாழ்கையும் இல்லையா?

    அழைப்புக்கு நன்றி.. முடியும் போது கண்டிப்பா எழுதிடறேன்..

    ReplyDelete
  11. ஹலோ!!! மைக் டெஸ்டிங்... 1 2 3

    டொக்! டொக்! டொக்!
    வீட்டில யாராவது இருக்கிறீங்களா!!! இல்லாட்டால் லீவில போய்ட்டீங்களா!!!!!!!!

    ReplyDelete
  12. இருக்கோம் இமா :) சொல்லுங்கோ..

    ReplyDelete
  13. இருக்கீங்களான்னு கேட்டுட்டு எட்டிப் பார்க்கறதுக்குள்ள தபால்காரர் ஓடிட்டார் போல :))

    ReplyDelete
  14. முன்னை மாதிரி வெளிய காணக் கிடைக்கலைன்னு தோணிச்சு. அதான் கதவைத் தட்டிப் பார்த்தேன். ;)

    ReplyDelete
  15. இங்கிட்டு தான் இருக்கேன் இமா.. ப்ளாக் பக்கம் வாறது கொஞ்சம் குறைஞ்சிருக்கு.. will get back soon..

    ReplyDelete
  16. நலம்தானே சந்தனா? ஆளையேக் காணோமே!

    ReplyDelete
  17. ஹூசைனம்மா.. நன்றி

    நலம்.. நலம்.. விரைவில் வாறன்..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)