25 July 2010

விளக்கம்..

இதுக்கு முன்னாடி பதிவுல ஒரு கவிதைய எழுதினாலும் எழுதினேன், வந்தவங்க எல்லாரும் ஆம்லெட், வட இதுலயே கண்ணாயிருந்து பிச்சுப் பிச்சுத் தின்னுட்டுப் போயிட்டாங்கள் (நன்றி அதிரா).. யாருக்கும் புரிஞ்சதான்னு தெரியல.. அதனால, இங்க அதோட விளக்கம் கொடுத்துட்டுப் போறேன்.. 

வேற ஒன்னுமில்ல.. இந்த பாஸ்வர்ட் கள் தொல்ல தாங்க முடியல.. அதான்.. நான் படிக்கற/வேல பாக்கற இடத்துக்கு மட்டுமே நிறைய இருக்கு.. அதய வச்சுத் தான் ரூம் உள்ளார நுழைய முடியும்.. கம்புயூட்டர ஆன் பண்ண முடியும்.. அதுக்கப்புறம், ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் ஒன்னொன்னு... என்னோட பேர வைக்கக் கூடாதாம்.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி - சிலதுக்கு எழுத்து மட்டும் இருக்கனுமாம். சிலதுக்கு எழுத்து, அதுல கேப்பிடல் லெட்டர் ஒன்னு, ஒரு நம்பர் இப்பிடி இருக்கனுமாம்.. எத்தன எழுத்துன்னும் கணக்கு இருக்கு.. வேற யாரும் கண்டுபுடிக்காத மாதிரி இருக்கனுமாம்.. 

இத்தோட முடிஞ்சிட்டா பரவாயில்லீங்க.. மூணு மாசத்துக்கு ஒருக்கா எக்ஸ்பயர் ஆயிடுதுங்க.. ஏற்கனவே வச்ச பேர மறுபடியும் வைக்கக் கூடாதாம்.. என்ன பேர் வைக்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சு (தெனமும் ஞாபகம் வரனும்ல்ல) வைக்க வேண்டியதாயிருக்கு.. பேர மாத்துன ஒரு வாரத்துக்கு, பழய பேரயே மாத்தி அடிச்சிடறேன்.. மூணு வாட்டி தப்பா அடிச்சா - அம்புட்டுத் தான்.. அக்கவுண்டே எக்ஸ்பயர் ஆயிடுது.. அதுக்கப்புறம், ஐ டி ஆட்களக் கூப்பிட்டு, அவங்க என்னப் பத்தின விவரங்கள சரி பாத்து, மறுபடியும் ஆரம்பிச்சுத் தருவாங்க..

அதக்கூட ஒன்னொன்னாத் தான் எக்ஸ்பயர் ஆவற மாதிரி வச்சிருக்காங்க.. அப்ப ஒன்ன மட்டும் மாத்திட்டு, மத்ததெல்லாம் கிட்டத்தட்ட அதே மாதிரி இருக்கும்.. அதய இதுக்குத் தட்டி இதய அதுக்குத் தட்டின்னு ஒரே குழப்பம் தான்.. என்னிக்காவது எல்லா பாஸ்வர்டையும் ஒரே வாட்டில சரியாத் தட்டி எண்டர் ஆயிட்டேன் வச்சுக்கோங்க - அன்னிக்கு மழை தான்..

எங்க ஆஃபிசர் ஒருத்தர் - எப்பவுமே மூணாவது வாட்டில தான் சரியாத் தட்டுவார்.. அது ஏன்னே தெரியல :) எப்பிடியோ, மூணுக்குள்ள நடந்தா சரி தான்..

இது போவ, மெயிலுக்கு, துணிக்கடைக்கு, பேங்க்க்கு, இண்டர்னெட் கனெக்‌ஷனுக்கு, லைப்ரரிக்கு, விமானம்.காம் களுக்கு (அது ரெண்டு மூணு இருக்கும்) அப்பிடியிப்பிடின்னு ஒரு அம்பதாவது தேறும்..  

இதெல்லாம் எதுக்குன்னா - செக்யூரிட்டி காரணத்துக்காக.. அதான் இதுகளையும், காவல் தெய்வங்களையும் (ஊர்ல இருக்கற மக்களோட நம்பிக்கை) ஒப்பிட்டு எழுதுனன்.. 

அதிரா - என் புலம்பல் கேக்குதா? இப்பப் புரிஞ்சதா?

இந்தக் கடையில நோ வடை, ஓம்லெட்.. (அதாவது பின்னூட்டம் கிடையாது) ஏதாவது திட்டனும்ன்னா, அந்தக் கவிதைப் பதிவுலயே திட்டிக்கோங்க :)) யாராவது எட்டிப் பாத்து இதெல்லாம் ஒரு பதிவான்னு யாரும் கேட்டுடக்கூடாது :) அதான்... ரெண்டு மூணு நாளுல நீக்கிடறேன் இதய.. 

நன்றி..