14 January 2010

சில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..

இந்தச் சம்பவமும் உரையாடல்களும் உண்மையே.. சம்மந்தப்பட்டவர்களின் நலன் கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.... :))


லெட்ஸ் கோ டின்னர் டுநைட்...

கண்ணம்மா வின் அலுவலக மேலாளர் தன் பணியாளர்கள் அனைவருக்கும் இவ்வாறு ஒரு ஈமெய்ல் அனுப்பியிருந்தார்..

கண்ணம்மா தன் சக பணியாளர் நாதிரா (அதாங்க பொக்கிஷம் ஹீரோயின்) விடம் கருத்து கேட்டார் (எதுவும் சுயமா முடிவெடுக்கத் தெரியாதுல்ல, அதான்....)

”போகனுமா? ”

”போய்த்தான் பாப்போம்.. ”

எனவே.. நாமும்.. லெட்ஸ் கோ டின்னர் டுநைட்...

இருவருமாக, ஆறரை மணி டின்னருக்கு ஆற அமர ஆறு மணிக்கு கிளம்பி, வழி தெரியாம அங்கயிங்க சுத்தி, சரியா ஆறு இருபத்தஞ்சுக்கு வந்து சேர்ந்து பெருமூச்சிட்டார்கள்..

"யப்பாடி.. சரியான டைம்க்கு வந்துட்டோம்.."

அவர்கள் உள்ளே நுழைந்த போதே பல இதர பணியாளர்கள் வந்துவிட்டிருந்தனர்.. சில புதியவர்களும்.. அவர்களிடம் அறிமுகமாகி, அறிமுகம் பெற்று, எல்லோரும் இருக்கைகளில் அமரத் துவங்கினர்..

ஏற்கனவே இருவரும் பேசி வைத்திருந்தார்கள்.. பெரிய மேலாளரின் முன் அமர வேண்டாமென.. தேடிப் பார்த்து மேஜையோரமாக ரெண்டு சீட் பிடித்து ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்தனர்.. அவர்களின் நேரம், புதிதாக அறிமுகமான ஒருவர், அந்த நீள்சதுர மேஜையில் இவர்கள் அமர்ந்திருந்த முனைகளுக்கு நடுவிலான பக்கத்தில், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்..






ஆர்டர் கொடுத்துவிட்டு அனைவரும் தத்தம் அருகிலிருப்பவர்களிடம் பேச ஆரம்பித்தனர்..

கண்ணம்மாவத் தான் பாத்தாலே தெரியுமே.. எந்தூருன்னு.. அந்தவொரு அமெரிக்கரும் (பெயர் ராக்கண்ணன் னு வச்சுக்குவோம்) மாத்லாட ஆரம்பித்தார்..

ராக்: ”இந்தியால எந்த இடத்துல இருந்து வரீங்க”

(என்னமோ எல்லா இடமும் தெரிஞ்ச மாதிரி....)

கண்ஸ்: (நம்மூரு பேரச் சும்மானாச்சும் சொல்லிப் பாக்கலாம் என்றெழுந்த எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு...) ”சென்னை ங்க”

ராக்: (சற்று யோசித்துவிட்டு...) ”கொல்கத்தா ன்றாங்களே அதுக்குப் பக்கமா?”

கண்ஸ்: (அடக் கொடுமையே....) ”இல்ல.. இது கீழ் முனைக்கும் கொஞ்சம் மேல”

ராக்: ”புரியலயே.... முக்கோணம் போட்டு எது எங்கன்னு காட்டுங்க..”




கண்ஸ்: (முக்கோணமா!!... இம்புட்டு இந்திய அறிவா!!...) ”இது கொல்கத்தா, இது சென்னை, இது மும்பை.. மும்பை - கேள்விப்பட்டிருக்கீங்களா?”

ராக்: ”ஓ.. மும்பை.. தெரியுந்தெரியும்..”

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.. ரொம்ப சிம்பிளா மேட்டர் முடிஞ்சு போச்சு..)
கண்ஸ் நிம்மதியாக.... கண் மூடித்.... திறப்பதற்குள்......

 அடுத்த கேள்வி வந்து விழுந்தது..

ராக்: ”இங்கிலாந்து பற்றி என்ன நினைக்கிறீங்க?”

கண்ஸ்: (இது ரொம்ப ஈசியான கேள்வி, ஹிஹ்ஹீஹீ...) ”நான் அங்கல்லாம் போனதில்லீங்க.. அதனால சொல்லத் தெரியல..”

ராக்: (கண்களைச் சுருக்கி விரித்து கொஞ்சம் யோசித்து...) ”அதாவதுங்க, ப்ரிட்டிஷ் ராஜ் பத்தி என்ன நினைக்கறீங்க?”

கண்ஸ்: (போச்சுடா...) ”அதெல்லாம் நான் பொறக்கறதுக்கு முன்னாடியே கிளம்பி போய்ட்டாங்க....”

ராக்: ”அவங்க உங்களுக்கு நல்லது செஞ்சாங்கன்னு நினைக்கறீங்களா இல்ல...”

கண்ஸ்: (சரியான விடாக்கொண்டனா இருக்காரே...) ”சில விஷயத்துல நல்லது செஞ்சிருக்காங்க - அவங்க வரதுக்கு முன்னாடி சின்னச்சின்ன ராஜ்யங்களா இருந்தோம்.. ஒரு பொது எதிரிய எதிர்க்க எல்லாரும் ஒன்னு சேந்தோம்.. அப்புறம்.. காலேஜ் எல்லாங்கட்டியிருக்காங்க.. அவங்க அறிமுகப்படுத்திட்டு போன இங்கிலீஷ படிச்சு தான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கோம்.. ஆனாலும், எங்க வீட்டுக்குள்ள யாரோ வந்து எங்கள அதட்டி ஆண்டது எங்களுக்கு பிடிக்கல.. எங்க பொருள எல்லாம் அவங்க எடுத்துகிட்டு போனாங்க.. அதும் பிடிக்கல.. இப்படி.. அப்படி.. ரெண்டுமே..”

(எப்பிடியோ டிப்ளோமாடிக்கா ஒரு பதிலச் சொல்லி சமாளிச்சாச்சு.. ) கண்ஸ் நிம்மதியாக.... கண் மூடித்.... திறப்............................

அடுத்த கேள்வி வந்து விழுந்தது...

ராக்:   ”இந்தியால எந்த இடத்துல இருந்து வரீங்க?”

எதிரில் அமர்ந்திருந்த நாதிரா பதிலளிக்க ஆரம்பித்திருந்தார்....

”நான் இந்தியரில்லை...”

(தொடரும்..)


எல்லாத்தையும் எழுதி முடிக்க சோம்பேறித்தனமா இருக்கு.. அதேன்.. ஆரும் கோச்சுக்கப்படாது..



4 comments:

  1. //ஆரும் கோச்சுக்கப்படாது.. //
    நல்ல கதை இது.

    ReplyDelete
  2. இமா.. எழுதிட்டே இருக்கேன்.. கதயில்ல.. நடுவில போய் சாப்பிட்டதும் கொஞ்சம் தெம்பு வந்துடுச்சு...

    ReplyDelete
  3. நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)